Skip to main content

தன்னடக்கம் - ஒரு சீன சிறுகதையின் மொழிபெயர்ப்பு




பல ஆண்டுகளுக்கு முன்பு குய் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சீனாவின் முதலமைச்சருக்கு தேரோட்டும் சேவகனாக பணியாற்றி வந்தான்.
ஒருநாள் இருவரும் தேரில் சென்று கொண்டிருக்கும்போது, குய்-யின் வீட்டு வழியாக செல்ல நேர்ந்தது.
அப்போது குய்-யின் உறவினர்கள் அவன் முதல்வருக்கு தேரோட்டுவதைப் பார்த்து பெருமிதம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், குய்-யின் மனைவியிடம் ஓடோடிச் சென்று,
"விரைவாக வா... உனது கணவர் முதல்வருக்கு தேரோட்டி வருகிறார்" என்றார். உடனே அவளுடைய மனைவியும் ஓடி வந்து பார்த்தாள்.
ஆனால் குய்-இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தலையை உயர்த்திக் கொண்டு, செருக்கான பார்வையுடன் அவளைக் கடந்து சென்றான்.
அன்று மாலை வீட்டுக்கு வந்தான் குய். தன் மனைவி சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்த அவன்,
"நீ ஏன் மிகவும் சோகமாக இருக்கிறாய்?" என்று கேட்டான்.
"நான் உங்களை விவாகரத்து செய்யப் போகிறேன்..." என்று பட்டென்று சொன்னாள் அவள்.
இந்தப்பதிலால் அதிர்ச்சியடைந்த குய், "ஏன்...? ஏன் என்னை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று சொல்கிறாய்?" என்றான்.
"நீங்கள் குதிரைவண்டியில் வந்து கொண்டிருக்கும்போது, முதலமைச்சரைப் பார்த்தேன். அவரின் முகத்தில் கருணையும், தன்னடக்கமும் குடிகொண்டிருந்தது. ஆனால் நீங்களோ அவரது தேரோட்டி, ஆனால் நீங்களோ செருக்கோடும் ஆணவத்தோடும் எங்களைக் கடந்து சென்றீர்கள்... இந்த ஆணவம் ஒருபோதும் நன்மை செய்யாது. அதனால்தான் உங்களை விவாகரத்து செய்யப்போகிறேன்" என்று அவள் பதிலளித்தாள்.
தான் தவறுசெய்துவிட்டோம் என்பது அப்போதுதான், அவனுக்கு விளங்கியது. செய்த தவறுக்காக மனைவியிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இனிமேல் அதுபோல் தன்னடக்கமில்லாமல் நடந்து கொள்ளமாட்டேன் என்றும் உறுதியளித்தான்.
மறுநாள் முதல்வரைச் சந்தித்த குய்- நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாமல் சொன்னான். மேலும் தனக்கு வேறொரு பணி வழங்குமாறும் கேட்டுக் கொண்டான்.
"நீ மிகவும் நேர்மையானவன். செய்த தவறை நீ உணர்ந்து விட்டாய். இனி அந்தத் தவறை செய்யமாட்டேன் என்றும் உறுதியளித்திருக்கியாய்..." என்று சொன்ன முதலமைச்சர், அவனுக்கு தன் அலுவலகத்திலேயே பணி வழங்கினார்.
நேர்மை, தன்னடக்க குணம் ஆகியவற்றின் காரணமாக குய் தன் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போனான். 


Comments

Popular posts from this blog

வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியா மோடி?

மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன... அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்.... இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது. "நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்" என்று அவர் அடுக்கிய வரிசைக்கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெ...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...