Skip to main content

"வருங்கால அரசியலின் நம்பகமான தலைமை , நம் தளபதியே "

அரசியலில் உழைப்பால் உயர்த்தவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ஆகையால் ஸ்டாலினையும் எனக்குப் பிடிக்கும்... ஐந்து முறை முதல்வராய் இருந்த ஒருவரின் வாரிசு இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது என்று கேட்பவர்களில் ஓரிருவர் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து அவரை “வருங்கால அரசியலின் நம்பகமான தலைமை ‘நம்’ தளபதியே” என்று மனதார சொல்ல வைத்துவிட்டேன் என்றால் அதையே பெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.

சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதனும் ‘தன் வாழ்க்கை இப்படியே போய்விடாது இதற்கு ஒரு மாற்று கண்டிப்பாய் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். சிலர் மறுபிறவியை நினைத்து ஏமாந்து போகிறார்கள்... சிலர் இப்பிறப்பிலேயே அனைத்தும் கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தமக்குத் துணையாக மகனையோ மகளையோ அல்லது தலைவனையோ நம்பிக்கை நட்சத்திரமாகக் கொள்கிறார்கள்...  அந்த நட்சத்திரம் துருவநட்சத்திரமாய் இருள் சூழ்ந்த நம் வாழ்வில் வெளிச்சக் கீற்றை பரவச் செய்யும் என்று நினைக்கிறார்கள்... அவர்கள் உயிர் வாழ்வதற்கான அச்சாணி இந்த ஒரேயரு நம்பிக்கையில்தான் இருக்கிறது. 

இப்படி ஒரு மகனாக, தலைவனாக ஸ்டாலினை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். கூடை நிறைய ஆதாரங்கள் இருந்தாலும் ஒருசில ஆதாரங்களை உங்கள் சட்டைப்பையில் வைக்கிறேன்... 

சொல்லல், சொன்னபடி நடத்தல்... மக்களோடு மக்களாக வாழ்தல்... இந்தப் பண்புகள் தலைவனுக்கு அழகு. இந்தப் பண்புகள் அவருக்கு எப்போதோ வந்துவிட்டன. என்பதற்குச் சாட்சி சென்றமுறை அவரின் உழைப்புக்குக் கிடைத்த துணை முதல்வர் பதவி. எந்த தொகுதிக்குப் பிரச்சாரம் போனாலும் அவர் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு மக்கள் அவரை பார்க்கும் பார்வையே அன்பை-தலைமையை- அந்தப் பார்வை இன்னொரு உத்வேகத்தையும் அளிக்கும்  ‘நாங்கள் உங்களோடு இருக்கிறோம் தளபதியே’ என்று.

சென்னை மேயராக இருந்தபோது, நான் முதல்வராய் இருக்கும் ஒரு மாநிலத்தின் தலைநகரில் ஸ்டானின் முதல்வராக இருப்பதா? கூடாது... இவனது ஆக்கபூர்வ திட்டங்களின் முன்னால் நாம் எடுபடமாட்டோம் என்று நன்றாகத் தெரிந்திருந்ததால்தான் என்று மாநகராட்சியையே கலைக்கும் அளவுக்குச் சென்றார் “மக்கள் முதல்வர்” என்ற போர்வையில் கதகதப்பாய் வாழும் அந்த அம்மையார். இந்த நிகழ்வு ஒன்றே போதும் எதிரிகளுக்கு ஸ்டாலின் எவ்வளவு சிம்மசொப்பனமாய் இருக்கிறார் என்பதற்கு. 

எத்தனை கோடி அம்புகள் ஊடகங்களால் எய்யப்பட்டாலும் அவை மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின் முன் முனைமழுங்கி விழுகின்றன. மாற்றுக்கட்சியினர் இவரைக் கண்டவுடன் கைகுலுக்கியோ கட்டியணைத்தோ நெருங்கமாக இருப்பதையும் கண்டு வருகிறோம். எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்துவதிலும், தோழமைக் கட்சிகளிடம் அன்யோன்யமாக இருப்பதிலும் இவர் கைதேர்ந்தவராக இருக்கிறார் என்பது இந்த நிகழ்வுகளின் மூலம் எளிதாக விளங்கும்.

ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆகும் நிலை வந்த போது எதிர்த்தார்... சட்டமன்ற வேட்பாளராக முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோதும் எதிர்த்தார் நம் கலைஞர்... பக்குவப்பட வேண்டும்... அது இயல்பாகவே அமைய வேண்டும் என்று அவர் நினைத்ததால்தான்...

இப்போது அவரே சொல்கிறார் “6வது முறையாகதான் முதல்வராக விருப்பமில்லை என்று...” ஆக இளைஞர்களுக்கு மட்டும் அல்ல... திமுக தலைவருக்கே ஒரு நம்பகமான தலைமை கிடைத்து விட்டது. 

Comments

Popular posts from this blog

வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியா மோடி?

மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன... அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்.... இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது. "நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்" என்று அவர் அடுக்கிய வரிசைக்கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெ...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...