Skip to main content

சாதனை மாணவி



"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள்.
சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்...
இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்... 
ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள்.
அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....?
விஷயத்திற்கு வருவோம்.
படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா... 
மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர். 
அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம்.
இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது. 
தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கிவிட்டார்கள். 
இரண்டு ஆண்டுகள் கணவரோடு சேர்ந்து வாழ்ந்தார் ஜெயப்பிரபா... மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை... சிக்கல்கள் தொடர்ந்தன. 
18 வயது பூர்த்தியான பெண்ணுக்குத்தான் மணமுறிவு சட்டம் செல்லுபடியாகும் என்பதால், அப்படியே தனது பிறந்தகம் வந்து விட்டார் ஜெயப்பிரபா.
வீட்டிலேயே இருந்து கொண்டிருந்ததால் வெறுமை அவரை பிடித்து உலுக்கியது.
அதன் பிறகுதான் படிக்க வேண்டும் என்ற கெஞ்சலும் அதைத் தொடர்ந்து கிடைத்த அனுமதியும்.
பெற்றோர்கள் அனுமதி கொடுத்தால் போதுமா? பள்ளியில் இந்தப் பெண்ணை சேர்த்துக் கொள்ள வேண்டுமே...
பள்ளி நிர்வாகத்தினர் இந்தப் பெண்ணை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டனர். 
இதனைத் தொடர்ந்து இந்து பத்திரிகை மூலமாக பிரச்சனையை அணுகி மீண்டும் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்...
இப்போது என்ன அதற்கு என்கிறீர்களா....?
இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் கல்வியை எதிர்கொண்ட ஜெயப்பிரபா, +2 அரசுப் பொதுத்தேர்வில் 1136 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார். 
இந்த சாதனையை பள்ளி நிர்வாகம் கண்டு அதிசயித்துப் போயிருக்கிறது. மேலும் நொண்டிகோவில்பட்டி கிராமமே மகிழ்ச்சி பொங்க பார்த்திருக்கிறது... மேலும் அவர் வயதுப் பிள்ளைகளுக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது... 
பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும், ஜெயபிரபாவின் இந்த மதிப்பெண் உதவியிருக்கிறது.
இந்த மாணவிக்கு மருத்துவக்கல்வி கிடைக்கிறதோ இல்லையோ... இவரின் இந்த மதிப்பெண் நொண்டிகோவில்பட்டி கிராமத்தில் உள்ள மாணவிகளின் உயர் கல்விக்கு அரணாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...