Skip to main content

Posts

Showing posts from January, 2015

குறும்புத் தலையால் வந்த மரம் - பர்மிய நாட்டுப்புறக் கதை

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. மியான்மருக்கு (பர்மா) அருகே பர்மிஸ்ட் என்ற தீவு அது. அதிலிருந்து மூன்று பேரைக் கட்டுமரக்காரர்கள் பிடித்து வந்தார்கள். அந்த மூவரில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்கள் மூன்று பேரும் அரசரின் அவையில் நிறுத்தப்பட்டனர். அரசர் அவர்கள் மூவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?” என்று கேட்டார். அமைச்சர் எழுந்து “முதலாமவன் மக்களின் பணத்தையும் அவர்களின் பொருள்களையும் கொள்ளையடித்தவன். அடுத்தவள், சூனியக்காரி. மக்களைப் பல விதமாகப் பயமுறுத்தி, அவர்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கினாள்... கடைசியாக, இருக்கிறானே இவன், பயங்கரமான குறும்புக்காரன். ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு, மக்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோஷம் அடைபவன்...” என்று ஒவ்வொன்றாகச் சொன்னார். இதையெல்லாம் கவனமாகக் கேட்ட மன்னர், நிதியமைச்சரை அழைத்தார். “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைக் கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுங்கள். அவர்கள் தங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யுங்கள். வறுமைதான் இவர்களைக் குற்றம் செய்ய வைத்துள்ளது. வறுமையை ஒழித்துவிட்டால் இவர்கள் ...

தும்பிக்கை பெரிதான ரகசியம்!

யானையின் மூக்கு, அதான் தும்பிக்கை எப்படி இருக்கும்? பாதத்தைத் தொடும் அளவுக்கு நீண்டு வளைந்து இருக்கும் அல்லவா? ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தும்பிக்கை அப்படி நீண்டு இருக்கவில்லை. அது குட்டையாகவே இருந்தது. அப்புறம் எப்படி அது நீண்டது? ஒரு காட்டுல தம்புன்னு யானைக் குட்டி ஒன்று இருந்தது. குட்டையாக இருக்கும் தும்பிக்கையை பெரியதாக மாற்றவேண்டும் என்று அது நினைத்தது. எப்போ பார்த்தாலும் தன் அம்மாவிடம் ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும் பழக்கமும் அதற்கு உண்டு. அதுவும் காட்டுல இருக்குற மற்ற விலங்குகளைப் பற்றிதான் கேட்கும். நெருப்புக்கோழி பறவைக்கு பெரிய இறக்கைகள் ஏன் இருக்கு? ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ஏன் மேலே நீண்டு இருக்கு? இந்த நீர்யானையோட கண்கள் எப்போதும் சிவப்பாகவே இருக்குதே? எலுமிச்சம் பழச் சுவையை குரங்குகளுக்கு ஏன் பிடிக்கிறதில்லை?, முதலைகள் இரவு நேரத்தில் உணவை எப்படித் தேடும்? – தினமும் இப்படி ஏதாவது கேள்வியை அம்மாவிடம் தம்பு கேட்டுக்கிட்டே இருக்கும். ஆனால், சில சமயம் அம்மா யானை பதில் சொல்லும். சில சமயம், “உனக்கு வேலையே இல்லையா?”ன்னு செல்லமாகத் திட்டும். ஒரு நா...