Skip to main content

Posts

Showing posts from April, 2015

"வருங்கால அரசியலின் நம்பகமான தலைமை , நம் தளபதியே "

அரசியலில் உழைப்பால் உயர்த்தவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ஆகையால் ஸ்டாலினையும் எனக்குப் பிடிக்கும்... ஐந்து முறை முதல்வராய் இருந்த ஒருவரின் வாரிசு இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது என்று கேட்பவர்களில் ஓரிருவர் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து அவரை “வருங்கால அரசியலின் நம்பகமான தலைமை ‘நம்’ தளபதியே” என்று மனதார சொல்ல வைத்துவிட்டேன் என்றால் அதையே பெரும் வெற்றியாகக் கருதுகிறேன். சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதனும் ‘தன் வாழ்க்கை இப்படியே போய்விடாது இதற்கு ஒரு மாற்று கண்டிப்பாய் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். சிலர் மறுபிறவியை நினைத்து ஏமாந்து போகிறார்கள்... சிலர் இப்பிறப்பிலேயே அனைத்தும் கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தமக்குத் துணையாக மகனையோ மகளையோ அல்லது தலைவனையோ நம்பிக்கை நட்சத்திரமாகக் கொள்கிறார்கள்...  அந்த நட்சத்திரம் துருவநட்சத்திரமாய் இருள் சூழ்ந்த நம் வாழ்வில் வெளிச்சக் கீற்றை பரவச் செய்யும் என்று நினைக்கிறார்கள்... அவர்கள் உயிர் வாழ்வதற்கான அச்சாணி இந்த ஒரேயரு நம்பிக்கையில்தான் இருக்கிறது.  இப்படி ஒரு மகனாக, தலைவனாக...

ஈட்டனும் எழிலும்

அந்த டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.... “சொர்க் சொர்க்” என டீ ஆற்றும் சத்தமும், “சளக் சளக்” எனக் கண்ணாடி டம்ளர்கள் கழுவும் சத்தமும் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தன. “அண்ணே ஸ்ட்ராங்க” ஒரு டீ... மீடியமா ஒரு டீ... சைனா டீ.. காபி, பால், மசாலா பால்” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்... அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு அவரவர்களுக்குத் தேவையான பானங்களை டீ மாஸ்டர் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்... இந்த டீக்கடையில் இருக்கும் சர்க்கரைச் சட்டியை நம்பி, ஈட்டன் என்ற ஈயும், எழில் என்ற எறும்பும் வாழ்ந்துவந்தன. தனக்கு இறகுகள் இருப்பதாலும், எங்கு வேண்டுமானாலும் பறக்க முடியும் என்பதாலும் ஈட்டனுக்கு தற்பெருமை அதிகம். இதைச் சொல்லி எழிலை எப்போதும் கேலி செய்துகொண்டே இருக்கும். இதை ஈட்டன் வாடிக்கையாக வைத்திருந்தது. எழில் இதையெல்லாம் பொருட்படுத்தாது. தனது வேலை மட்டுமே கதி என்று இருக்கும். ஒருநாள்… “எழில்” என்று சத்தமாகக் காதருகே கூப்பிட்டு விட்டு ஒரு சர்க்கரைத் துண்டை எடுத்துக் கொண்டு விர்ரென்று பறந்து சென்றது ஈட்டன். வேகவேகமாக ஊர்ந்து கொண்டிரு...