அரசியலில் உழைப்பால் உயர்த்தவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... ஆகையால் ஸ்டாலினையும் எனக்குப் பிடிக்கும்... ஐந்து முறை முதல்வராய் இருந்த ஒருவரின் வாரிசு இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது என்று கேட்பவர்களில் ஓரிருவர் இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து அவரை “வருங்கால அரசியலின் நம்பகமான தலைமை ‘நம்’ தளபதியே” என்று மனதார சொல்ல வைத்துவிட்டேன் என்றால் அதையே பெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.
சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதனும் ‘தன் வாழ்க்கை இப்படியே போய்விடாது இதற்கு ஒரு மாற்று கண்டிப்பாய் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். சிலர் மறுபிறவியை நினைத்து ஏமாந்து போகிறார்கள்... சிலர் இப்பிறப்பிலேயே அனைத்தும் கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தமக்குத் துணையாக மகனையோ மகளையோ அல்லது தலைவனையோ நம்பிக்கை நட்சத்திரமாகக் கொள்கிறார்கள்... அந்த நட்சத்திரம் துருவநட்சத்திரமாய் இருள் சூழ்ந்த நம் வாழ்வில் வெளிச்சக் கீற்றை பரவச் செய்யும் என்று நினைக்கிறார்கள்... அவர்கள் உயிர் வாழ்வதற்கான அச்சாணி இந்த ஒரேயரு நம்பிக்கையில்தான் இருக்கிறது.
இப்படி ஒரு மகனாக, தலைவனாக ஸ்டாலினை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். கூடை நிறைய ஆதாரங்கள் இருந்தாலும் ஒருசில ஆதாரங்களை உங்கள் சட்டைப்பையில் வைக்கிறேன்...
சொல்லல், சொன்னபடி நடத்தல்... மக்களோடு மக்களாக வாழ்தல்... இந்தப் பண்புகள் தலைவனுக்கு அழகு. இந்தப் பண்புகள் அவருக்கு எப்போதோ வந்துவிட்டன. என்பதற்குச் சாட்சி சென்றமுறை அவரின் உழைப்புக்குக் கிடைத்த துணை முதல்வர் பதவி. எந்த தொகுதிக்குப் பிரச்சாரம் போனாலும் அவர் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு மக்கள் அவரை பார்க்கும் பார்வையே அன்பை-தலைமையை- அந்தப் பார்வை இன்னொரு உத்வேகத்தையும் அளிக்கும் ‘நாங்கள் உங்களோடு இருக்கிறோம் தளபதியே’ என்று.
சென்னை மேயராக இருந்தபோது, நான் முதல்வராய் இருக்கும் ஒரு மாநிலத்தின் தலைநகரில் ஸ்டானின் முதல்வராக இருப்பதா? கூடாது... இவனது ஆக்கபூர்வ திட்டங்களின் முன்னால் நாம் எடுபடமாட்டோம் என்று நன்றாகத் தெரிந்திருந்ததால்தான் என்று மாநகராட்சியையே கலைக்கும் அளவுக்குச் சென்றார் “மக்கள் முதல்வர்” என்ற போர்வையில் கதகதப்பாய் வாழும் அந்த அம்மையார். இந்த நிகழ்வு ஒன்றே போதும் எதிரிகளுக்கு ஸ்டாலின் எவ்வளவு சிம்மசொப்பனமாய் இருக்கிறார் என்பதற்கு.
எத்தனை கோடி அம்புகள் ஊடகங்களால் எய்யப்பட்டாலும் அவை மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின் முன் முனைமழுங்கி விழுகின்றன. மாற்றுக்கட்சியினர் இவரைக் கண்டவுடன் கைகுலுக்கியோ கட்டியணைத்தோ நெருங்கமாக இருப்பதையும் கண்டு வருகிறோம். எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்துவதிலும், தோழமைக் கட்சிகளிடம் அன்யோன்யமாக இருப்பதிலும் இவர் கைதேர்ந்தவராக இருக்கிறார் என்பது இந்த நிகழ்வுகளின் மூலம் எளிதாக விளங்கும்.
ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆகும் நிலை வந்த போது எதிர்த்தார்... சட்டமன்ற வேட்பாளராக முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோதும் எதிர்த்தார் நம் கலைஞர்... பக்குவப்பட வேண்டும்... அது இயல்பாகவே அமைய வேண்டும் என்று அவர் நினைத்ததால்தான்...
இப்போது அவரே சொல்கிறார் “6வது முறையாகதான் முதல்வராக விருப்பமில்லை என்று...” ஆக இளைஞர்களுக்கு மட்டும் அல்ல... திமுக தலைவருக்கே ஒரு நம்பகமான தலைமை கிடைத்து விட்டது.
சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் ஒவ்வொரு மனிதனும் ‘தன் வாழ்க்கை இப்படியே போய்விடாது இதற்கு ஒரு மாற்று கண்டிப்பாய் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். சிலர் மறுபிறவியை நினைத்து ஏமாந்து போகிறார்கள்... சிலர் இப்பிறப்பிலேயே அனைத்தும் கிடைத்து விட வேண்டும் என்பதற்காக, தமக்குத் துணையாக மகனையோ மகளையோ அல்லது தலைவனையோ நம்பிக்கை நட்சத்திரமாகக் கொள்கிறார்கள்... அந்த நட்சத்திரம் துருவநட்சத்திரமாய் இருள் சூழ்ந்த நம் வாழ்வில் வெளிச்சக் கீற்றை பரவச் செய்யும் என்று நினைக்கிறார்கள்... அவர்கள் உயிர் வாழ்வதற்கான அச்சாணி இந்த ஒரேயரு நம்பிக்கையில்தான் இருக்கிறது.
இப்படி ஒரு மகனாக, தலைவனாக ஸ்டாலினை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். கூடை நிறைய ஆதாரங்கள் இருந்தாலும் ஒருசில ஆதாரங்களை உங்கள் சட்டைப்பையில் வைக்கிறேன்...
சொல்லல், சொன்னபடி நடத்தல்... மக்களோடு மக்களாக வாழ்தல்... இந்தப் பண்புகள் தலைவனுக்கு அழகு. இந்தப் பண்புகள் அவருக்கு எப்போதோ வந்துவிட்டன. என்பதற்குச் சாட்சி சென்றமுறை அவரின் உழைப்புக்குக் கிடைத்த துணை முதல்வர் பதவி. எந்த தொகுதிக்குப் பிரச்சாரம் போனாலும் அவர் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு மக்கள் அவரை பார்க்கும் பார்வையே அன்பை-தலைமையை- அந்தப் பார்வை இன்னொரு உத்வேகத்தையும் அளிக்கும் ‘நாங்கள் உங்களோடு இருக்கிறோம் தளபதியே’ என்று.
சென்னை மேயராக இருந்தபோது, நான் முதல்வராய் இருக்கும் ஒரு மாநிலத்தின் தலைநகரில் ஸ்டானின் முதல்வராக இருப்பதா? கூடாது... இவனது ஆக்கபூர்வ திட்டங்களின் முன்னால் நாம் எடுபடமாட்டோம் என்று நன்றாகத் தெரிந்திருந்ததால்தான் என்று மாநகராட்சியையே கலைக்கும் அளவுக்குச் சென்றார் “மக்கள் முதல்வர்” என்ற போர்வையில் கதகதப்பாய் வாழும் அந்த அம்மையார். இந்த நிகழ்வு ஒன்றே போதும் எதிரிகளுக்கு ஸ்டாலின் எவ்வளவு சிம்மசொப்பனமாய் இருக்கிறார் என்பதற்கு.
எத்தனை கோடி அம்புகள் ஊடகங்களால் எய்யப்பட்டாலும் அவை மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின் முன் முனைமழுங்கி விழுகின்றன. மாற்றுக்கட்சியினர் இவரைக் கண்டவுடன் கைகுலுக்கியோ கட்டியணைத்தோ நெருங்கமாக இருப்பதையும் கண்டு வருகிறோம். எதிரிகளுக்கு கிலியை ஏற்படுத்துவதிலும், தோழமைக் கட்சிகளிடம் அன்யோன்யமாக இருப்பதிலும் இவர் கைதேர்ந்தவராக இருக்கிறார் என்பது இந்த நிகழ்வுகளின் மூலம் எளிதாக விளங்கும்.
ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆகும் நிலை வந்த போது எதிர்த்தார்... சட்டமன்ற வேட்பாளராக முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோதும் எதிர்த்தார் நம் கலைஞர்... பக்குவப்பட வேண்டும்... அது இயல்பாகவே அமைய வேண்டும் என்று அவர் நினைத்ததால்தான்...
இப்போது அவரே சொல்கிறார் “6வது முறையாகதான் முதல்வராக விருப்பமில்லை என்று...” ஆக இளைஞர்களுக்கு மட்டும் அல்ல... திமுக தலைவருக்கே ஒரு நம்பகமான தலைமை கிடைத்து விட்டது.
Comments
Post a Comment