Skip to main content

மக்கள் பக்கம் திரும்புவார்களா இந்த அரசியல்வாதிகள்?

"மேகமாக இருந்ததால் போர்விமானங்களை பாகிஸ்தானால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் இப்போது தாக்குங்கள்,' என ராணுவத்துக்கு ஐடியா கொடுத்தேன்," என மோடி பேசியிருக்கிறார். வழக்கம்போல மோடியின் அடிபொடிகள் "ஆஹா... செம ஐடியாக்காரன்பா," என மோடியைப் புகழ்கிறார்கள்.
அறிவுள்ள மீதி உலகம் கிண்டல் செய்கிறது. இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒருவர் இருக்கிறார். அவர் சீமான்.
அவர் அள்ளிவிட்ட பொய்கள் சொல்லி மாளாது.
ஆமைக்கறி சாப்பிட்டது, ஆமை ஓட்டைத் திருப்பி போட்டு படகாக மாற்றி பயணம் செய்தது, அரிசிக்கப்பலைக் கடத்தியது, 1 லட்சம் யானைகளை போர்க்கப்பலில் ஏற்றிச் சென்று போரிட்டது, நம்மாழ்வார் பலாமரத்தைக் கட்டிப்பிடித்து அதனை பழம் பழுக்கும்படி செய்தது, ஏ.கே.74 துப்பாக்கியை பயன்படுத்தியது, கலைஞரின் பேனாவை எடுத்து எழுதும் அளவுக்கு பழக்கம், திருக்குறளை தப்புத்தப்பாக அர்த்தம் கற்பிப்பது, பிரபாகரன் இடத்தில் நான் இருந்திருந்தால் எப்போதோ தனி ஈழம் வாங்கியிருப்பேன் என்றது, எம்ஜிஆர் முதல்வராக பதிவியேற்ற போது பெரியார் வந்தார்ன்னு சொன்னது.. (எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்றபோது பெரியார் இறந்து போய் 5 ஆண்டுகள் ஆகியிருந்தது)  என்னால்தான் பிரபாகரனை போராளி என்று தெரியும்.... அதற்கு முன் தீவிரவாதிதானே என்றெல்லாம் அவர் சொன்ன பொய்களை கணக்கு வைக்க முடியாது.
சீமான் சொல்லிய பொய்கள் என்று குறுநூல் போட்டுத்தான் விற்க வேண்டும். அந்த அளவுக்கு மலைமலையாய் பொய்கள்.
இதனையெல்லாம் அவர் தெரிந்துதான் செய்கிறாரா? அல்லது தெரியாமல் செய்கிறாரா? என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் ஒரு இளையோர் சமுதாயத்தை தவறான தகவல்களைச் சொல்லி தவறான முன்னுதாரண அரசியல்வாதியாக இருக்கிறார் என்று மட்டும் உறுதியாகச் சொல்லிவிட முடியும்.
மணல், கிராணைட் கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைகுண்டராஜன், பிஆர்பி ஆகியோரை எதிர்த்து சீமான் நடத்திய போராட்டங்கள் எத்தனை?
ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், விவசாயம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் அவர் நடத்திய போராட்டங்கள் எத்தனை என்று பார்த்தால் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்..
அப்படியே மோடியின் பக்கம் போவோம்...
மக்கள் பிரச்சனையை மோடி கண்டு கொள்வதே இல்லை. எப்போது பார்த்தாலும் சர்ஜிக்கல் ட்ரைக், பாகிஸ்தான் நம்மைப் பார்த்து பயப்படுகிறார்கள்... தீவிரவாதிகள் அஞ்சி ஓடுகிறார்கள்... இந்த சாதனைகளை எதிர்க்கட்சிகள் பாராட்ட மறுக்கின்றன என்று சொல்லி தேசபக்தியோடு முடிச்சிப்போட்டு மக்கள் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்.
தற்போது அவர் அனைத்திற்கும் உச்சமாய் மேகத்தைக் காட்டி நான்தான் ஐடியா குடுத்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
மக்களின் உண்மையான தேவைகளை கருத்தில் கொள்ளாமல் இவர்கள் போன்றவர்கள் பேசி வருவது மேலும் மேலும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களை தவறான பாதைக்கும் அல்லது மேலும் மேலும் ஏழ்மை நிலைக்குச் செல்லவுமே வழிவகுக்கும்.
மக்களை நோக்கித் திரும்பும் அரசியல்வாதிகளை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியா மோடி?

மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன... அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்.... இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது. "நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்" என்று அவர் அடுக்கிய வரிசைக்கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெ...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...