Skip to main content

அனைவருக்கும் பொதுவானவர்

கலைஞர் இருக்கும்போதும் இறந்தபின்னும் செய்தது அந்த போராட்டம்தான்...
நேரிடையாக மோடியை சந்தித்து அவருக்கான இடத்தை மெரீனாவில் எளிதாக வாங்கியிருக்க முடியும் ஸ்டாலினால் ...
ஆனால் சில சமாளிப்புகளை செய்திருக்க வேண்டும்...
அதையெல்லாம் விடுத்து இங்கே உள்ள எடப்பாடியை சந்தித்து அதை அவர் மறுத்து அதன்பின் நீதிமன்றம் சென்று வாங்கியதே இப்போது கொண்டாடப்படும் விஷயமாகியிருக்கிறது...
அதேபோன்றுதான் திருமாவளவன் விஷயத்திலும் நடந்திருக்கிறது...
உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிட்டு எளிதாக இந்த வெற்றியை ருசித்திருக்க முடியும்.
ஆனாலும் திருமாவளவன் என்பவர் இத்தனை நாட்களாக நடத்திய சமூகநீதி, சனாதன எதிர்ப்பு பிரச்சாரம், சாதிய ஒற்றுமை, சாதி ஒழிப்பு போன்ற பிரச்சார முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மக்களை எந்த அளவுக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள மேற்கொண்ட அபாயகரமான முயற்சியே பானைச் சின்னத்தில் அவர் போட்டியிட்டது...
அந்த முயற்சியில் கடைசி நிமிடம் வரை சோதனை நிறைந்ததாக இருந்தாலும் போராடி அவர் பெற்ற வெற்றிதான் இப்போது கொண்டாடப்படும் விஷயமாகி விட்டது....
அதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "சிதம்பரம் தொகுதியில் கலைஞர் நிற்கிறார்" என்று அறிவித்தாரோ என்னவோ...
திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது...
"ஆம்... எல்லோரையும்போல் வெற்றி தலித்களுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித்தொகுதியாக இருந்தாலும்"
& இவ்விதம் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் ரஞ்சித்தின் ஆதங்கம் ஒருவகையில் சரியே என்றாலும் அவருக்க சில கேள்விகள்..
தலித் வெற்றிபெற போராட வேண்டுமெனில் எதிர்த்து நின்றவரெல்லாம் தலித் அல்லாதவர்களா? தனித்தொகுதி என்றால் அப்படித்தானே போட்டியிட முடியும்.
ஒரு தலித்தை எதிர்த்து இன்னொரு தலித் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமானதல்ல என்று சொல்லவருகிறீர்களா?
இவ்விதம் ரஞ்சித் ஆதங்கப்பட்டு பேசுகிற தலித் அரசியல்தான், திருமாவளவன் வெகுஜன அரசியலுக்கு வந்தாலும் அவரை தங்கள் எதிரியாக கருத வைக்கிறது... அல்லது கருத வைக்கப்பட வைக்கப்படுகிறது சில ஆதிக்கவெறிக் கூட்டங்களால்...
சிதம்பரம் தொகுதியில் திருமாவுக்கு தலித்துகள் மட்டும் வாக்களிக்கவில்லை. அனைத்து சமூகத்தினரும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தால்தான் தங்கள் தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்றுவார் என்று நம்பியதால் தங்கள் வாக்கை அவருக்கு செலுத்தியிருக்கிறார்கள்.
திருமாவின் வெற்றி சிரமமாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, திருமாவளவனின் வெற்றிக்காக தன் சொந்த வன்னிய சாதி மக்களை திருமாவை நோக்கி திரும்பியதால் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கருக்கு இருக்கும் பெரும் பங்கையும் மறந்துவிடக்கூடாது ரஞ்சித் சார். இதுவும் ஒருவகை சாதிய இணைப்பும் நல்லிக்கணமும் நிறைந்த நடவடிக்கைதான்...
திருமாவை கற்றறிந்தோர்... அவர் எழுதியதைப் படித்தோர்... பேசும் அற்புதக்கருத்துக்களைக் கேட்டோர் அனைவரும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அவரை பார்க்க விரும்புகிறார்கள்.
மக்களவையில் அவரது அறிவார்ந்த குரல் ஒலிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கும் சாதிகளுக்கும் அப்பாற்பட்டு விரும்பியவர்களை ரஞ்சித்துகள் சாதி அரசியலுக்குள் இழுக்கப் பார்ப்பது தவறான பார்வை.
முனைவர் திருமாவளவன் அனைவருக்கும் பொதுவானவர்... அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

Comments

Popular posts from this blog

வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியா மோடி?

மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன... அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்.... இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது. "நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்" என்று அவர் அடுக்கிய வரிசைக்கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெ...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...