Skip to main content

Posts

Showing posts from April, 2016
பச்சை முண்டாசு “வணக்கம்ணே” என்-று சொல்லிவிட்டு அரசமர நிழலில் பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார் பாண்டி. பாண்டிக்கு விவசாயத்தைத் தவிர ஒண்ணுந்த தெரியாது. செடி கொடிககூடத்தான் அவர் பேச்சு பொழப்பு எல்லாம். சில நேரம் வந்து அரசமரத்து நிழல்ல குந்துவார். அப்போதைக்கு அங்கு யாரு இருக்காங்களோ அவுங்ககிட்ட அரசியல் நிலவரம் பற்றி கேட்டுக்குவார். அவருக்கு ரெம்பவும் பிடிச்சவரும், அரசியல் நிகழ்வுகளை அள்ளிக் குடிச்சவரும் ஆன கோமாளி (பேரே அதுது£ன்)தான். அவருக்குத்தான் வணக்கம் சொல்லி விட்டு குந்தினார். “என்னண்ணே வணக்கம் பெருசா இருக்கு” என்று கேட்டு விட்டு மீசையைத் தடவி ஒரு சிரிப்பு சிரித்தார். ஒரு நாளிதழ் பக்கத்தில் கிடந்தது. அவருக்குப் படிக்கத் தெரியாது. ஆனாலும் படம் பார்த்து, அதில் சுவராஷ்யமா எதாச்சும் இருந்தா படிக்கச் சொல்லி கேட்டுக்குவார். “இந்தப் பச்சத்துண்ட தலைல முண்டாசு கட்னவரு  என்னண்ணே சொல்றாரு...?” என்றார். “விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளேன்-” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் தி...
மேய்ப்பர் யார்? ---------------------------------- “ஆடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம்“ இது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த அம்சம். இதுசம்பந்தமாக ஆடு மேய்க்கும் ஒரு பையனிடம் பகல் 10 மணிக்கு ஆபீஸ் ஆரம்பிக்கும் நேரத்தில் கேட்டபோது “உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தா ஆடுக காணாமப் போயிரும்... அடுத்தவன் வுட்டு நெலத்துல வாய வச்சுச்சுன்னா நாந்தான் தெண்டங்கட்டனும்... சாயந்தரமா வாங்க”ன்னுட்டான். நம்மளவிட பிஸியான ஆளா இருப்பான்போலனு பொழுதுசாய அவன மீட் பண்ணலாம்னு பாத்தா, அப்பவும் அவன் பயங்கர பிஸி. பட்டியில் சேர்ந்த ஆடுகளை கண்களாலேயே அளவெடுத்தான்... அவனுக்கு எண்ணத் தெரியாது... ஆனால் எல்லா ஆடுகளின் அடையாளமும் தெரியும்... ஒண்ணொண்ணுக்கும் அடையாளம் வச்சிருப்பான். ‘வாய்ல மட்டும் வெள்ளை விழுந்த ஆடு, கொம்பு நெளிஞ்ச ஆடு, காது சுருங்குன ஆடு’ இப்டின்னு... அதுபடி பாக்கும் போது காது சுருங்குன ஆட்டக் காணாம்... அது எங்கனுன்னு தேடிப்போனான். நான் பின்னாடியே போனேன்... அந்த ஆடு அஜய்குமாரோட (என்னடா கிராமத்துல அஜய்குமாரா னு கேக்காதீங்க... இங்க அஜித் குமார், நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்றெ...
குரலை நெரித்த ஹெலிகாப்டர் சத்தம் எஸ்.சஞ்சய் “ எட்டுமணிக்கு வண்டி வந்துரும்... ரெடியா இருக்கனும். கைப்புள்ள வச்சிருக்கவங்க வீட்லயே இருந்துக்கங்க... அம்மா பேசிக்கிட்டிருக்கும்போது அழுதுச்சுன்னா ‘காவிரிய வச்சிக்கோ அம்மாவ குடு’ன்னு பிளக்ஸ் அடிச்சு ஊரு முழுக்க ஒட்டினது... பரப்பன அக்ஹரஹாரம் என்று பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து அம்மா மைண்டும் அங்க போயிரும். பேச்சும் மாறிடும்... அப்புறம் எங்க பொழப்பு நாறிடும்... அதனால சொல்றபடி கேளுங்க” என்று ஆரம்பித்தார் ஒன்றியத் தலைவர். அம்புட்டுபேரும் கோயில்மாடு கணக்கா தலைய ஆட்டுனாய்ங்க... “ ஆத்துமணல் லோடு ஏத்துற அரைப்பாடி வண்டி வரும்... அம்புட்டுபேரும் ஏறிக்கங்க... ஏறும்போது எறநூறு ரூவா , ஒரு பிரியாணிப் பொட்டலம் தருவோம்... வாங்கிக்கிட்டு ஜாலியா போங்க... ஒரு மைதானத்துல எறக்கிவிடுவாங்க... சுத்தி மரங்க இருக்கனால வெயிலு தெரியாது... கொஞ்சநேரத்துல அம்மா வந்துருவாங்க... ஒருமணிநேரம் பேசுவாங்க.. அம்மாவக் கவனிக்கிறீங்களோ இல்லியோ... பக்கத்துல கோட்டு சூட்டு போட்ட ஒருத்தர கண்டிப்பா கவனிச்சே ஆகனும்... அவரு எப்ப கைய மேல தூக்கி கைதட்டுறாரோ அந்த நேரம் நல்லா கைதட்...