Skip to main content

பச்சை முண்டாசு


“வணக்கம்ணே” என்-று சொல்லிவிட்டு அரசமர நிழலில் பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார் பாண்டி.
பாண்டிக்கு விவசாயத்தைத் தவிர ஒண்ணுந்த தெரியாது. செடி கொடிககூடத்தான் அவர் பேச்சு பொழப்பு எல்லாம்.
சில நேரம் வந்து அரசமரத்து நிழல்ல குந்துவார். அப்போதைக்கு அங்கு யாரு இருக்காங்களோ அவுங்ககிட்ட அரசியல் நிலவரம் பற்றி கேட்டுக்குவார்.
அவருக்கு ரெம்பவும் பிடிச்சவரும், அரசியல் நிகழ்வுகளை அள்ளிக் குடிச்சவரும் ஆன கோமாளி (பேரே அதுது£ன்)தான்.
அவருக்குத்தான் வணக்கம் சொல்லி விட்டு குந்தினார்.
“என்னண்ணே வணக்கம் பெருசா இருக்கு” என்று கேட்டு விட்டு மீசையைத் தடவி ஒரு சிரிப்பு சிரித்தார்.
ஒரு நாளிதழ் பக்கத்தில் கிடந்தது.
அவருக்குப் படிக்கத் தெரியாது. ஆனாலும் படம் பார்த்து, அதில் சுவராஷ்யமா எதாச்சும் இருந்தா படிக்கச் சொல்லி கேட்டுக்குவார்.
“இந்தப் பச்சத்துண்ட தலைல முண்டாசு கட்னவரு  என்னண்ணே சொல்றாரு...?” என்றார்.
“விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளேன்-” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் திடீர் அறிவிப்பு”
என்று சத்தமாய்ப் படித்தார் கோமாளி.
முகம் சிறுத்தது.
கொஞ்சநேரம் பேசாம இருந்தார்.
பின்பு மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.
“அண்ணே ஒங்களுக்குத் தெரியாதது இல்ல. மண்ணை தோண்டுறவன் பொழப்பு எப்படிப் பட்டதுன்னு? ஆனா இவங்க மாதிரி ஆளுங்க இப்டியெல்லாம் சபதமேத்துக்கிறதால யாருக்கு நன்மை கெடச்சிரும்?
பேஞ்சு கெடுக்குது... பேயாமயும் கெடுக்குது... வானத்தப் பார்த்து நிக்கிற நமக்கு இந்த மாதிரி ஆளுங்கனால ஏதாச்சும் கெடச்சிருக்கா...
இவனுங்கள நம்பி போராட்டத்துக்கு போயி அன்னிக்கு பொழப்பு கெட்டதுதான் மிச்சம். ஆனா இவ்ளோ விவசாயிகள் என் பின்னாடி இருக்கிறதா இவனுங்க மட்டும் கல்லா கட்டீடுறானுங்க...
இந்த ஆளெல்லாம் 20 வருஷமா எலக்ஷன்லயே நிக்கல... இப்பத்தான் நிக்கிறாரு... இத்தனை வருஷமா எப்படிண்ணே அந்த ஆளு பொழப்பு ஓடுது... யோசிச்சாய்ங்களா...
பதவியில இருக்கவந்தான் அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டயப்போட்டுட்டு பொழப்பு நடத்துறான்... இவனுங்க மாதிரி ஆளுகளுக்கு எங்க இருந்துண்ணே கெடைக்கிறது காசு?...
இப்டியெல்லாம் பேசிப்பேசியே நம்மள வச்சி அவனுங்க வாழ்றானுங்கண்ணே”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் குடித்துக் கொண்டார். “அண்ணே ஒரு டீ சாப்டலாமா?”என்றும் கேட்டார்.
“சாப்டுவோம்ணே” என்று கோமாளியும் சொல்ல... இவரின் பார்வையை குறிப்பால் உணர்ந்த பொட்டிக்கடைக்காரர் “பெரிசு ரெம்ப கோவமா இருக்குபோல” என்று கோமாளியின் காதைக் கடித்துவிட்டு டீ கொண்டு வந்து கொடுத்தார்.
டீயை உறிஞ்சிய பாண்டி,
“இதுதான்... இப்டித்தான் என்று பட்டுன்னு சொல்றவன நம்பலாம்... ஆனா  இந்த ஆளு மாதிரி உணர்ச்சி வசமா பேசுறவங்கள எந்தக்காலத்துலயும் நம்பக்கூடாது... குடியக் கெடுத்துருவானுங்க... என்னைக்கும் நம்மளோட இருக்கிற ஆளுதாண்ணே நம்மளுக்கு வேணும்...” என்று சொல்லிவிட்டு டீக்கு காசு கொடுத்துக் கொடுக்கப் போனார்.
மரத்திலிருந்து காய்ந்த இலைகள் கீழே விழுந்து கொண்டிருந்தன.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...