Skip to main content

இடம்: மதுரை அரசு மருத்துவமனை அருகில் உள்ள டீக்கடை


"இப்டியொரு அக்கிரமமெல்லாம் நம்மநாட்லதான்யா நடக்குது" என்று விரக்தியாக சொல்லியபடியே வந்து குந்தினார் மாரிச்சாமி.
ஏற்கெனவே அவருக்கு முன்பாக வந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளையன், "என்னய்யா அக்குருமத்தக் கண்டுட்ட?" என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டார்.
"ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொல்றேம்ப்பா" என்று ஆரம்பித்த அவர் "சூடா ஒரு டீ போடுப்பா" என்று கேட்டார்.
"நீங்களே சூடாத்தான வந்திருக்கீங்க... மொதல்ல நடந்ததச் சொல்லுங்க" என்றதும்... படபடவென பொரிந்தார் மாரிச்சாமி...
"ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொன்றேன்ப்பா... அந்த மாநிலத்துல இருக்கிற கலஹண்டி பகுதியைச் சேர்ந்தவரு தனா மஜி. இவரு சம்சாரம் அமன்கடிக்கு உடம்பு சவுரியமில்ல. படக்-குன்னு அங்கனக்குள்ள இருக்க ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போனாரு. ஆனா சிகிச்சை பலனனிக்காம அந்த அம்மா செத்துப்போச்சு."
"அதுக்கு ஏன்யா நீ இந்தக்குதி குதிக்கிற... பொறப்பு எறப்பு சகசம்" என்று பேச்சை முடிக்கப்பார்த்தார் வெள்ளையன்.
"சொல்றத முழுசாக்கேளுய்யா... இதுக்கப்பறம்தான் அந்த அக்குருமம் நடந்திருக்கு... இவரு ஊரு ஆஸ்பத்திரியில இருந்து 60 கிலோ மீட்டர் தூரம் இருக்கு... அதனால பொணத்தை கொண்டு போக ஆம்புலன்ஸ் வேணும்னு கேட்டிருக்காரு... ஆனா ஆஸ்பத்திரிக்காரய்ங்க அதெல்லாம் முடியாதுன்னு ரொம்வும் ட்ரிக்ட்டா சொல்லீட்டாய்ங்க..."
"அப்பறம்?"
"என்னா செய்யிறதுன்னு தனா கொழம்பிப்போயிட்டாரு... பக்கத்துல அவரு மக அழுதுக்கிட்டே நிக்கிது... படக்குன்னு மனச கல்லாக்கிக்கிட்டு... பொனத்தை ஒரு பாயில சுத்தி இன்னொரு போர்வையையும் மேல சுத்தி இறுக்கமாக கட்டிட்டாரு. அப்புறம் படக்குன்னு தூக்கி தோள்ல வச்சிக்கிட்டு நடையக் கட்டிட்டாரு..."
"அடக்கொடுமையே..."
"அட ஆமான்றேன்... இவரு பொணத்த தூக்கிக்கிட்டு முன்ன நடந்துபோக... அவரு மக அழுதுக்கிட்டே பின்ன வர... ஊரே வேடிக்கை பாக்குதுய்யா..."
"அத போட்டா புடிச்சி ஒரு பத்திரிகையில செய்தி வந்திருக்கு... ஒருத்தன் இத இப்ப என்னம்மோ பேஸ்புக்குன்றாய்ங்களே அதுல பரப்பி விட்டிருக்கான்... அதனாலதான் இந்த விஷயம் இந்தியா முழுக்கப் பரவி சந்தி சிரிக்கிது இந்திய மானம்..."
"ஏன் போட்டா புடிச்சவன் இவருக்கு ஆதரவா ஆஸ்பத்திரிக்காரன்ட்ட சண்ட பிடிச்சிருக்கலாம்ல.. இல்ல ஆம்புலன்ஸ்க்கு காசு குடுத்திருக்கலாம்ல...?" என்று வெள்ளையன் கேக்க..
"காசு குடுத்திருந்தா அப்போதைக்கு பிரச்சன முடிச்சிருக்கும்... அடுத்து ஒருஒரு பொணத்துக்கு-ம் ஒருஒருத்தன் காசு குடுப்பானா? இல்ல கெடைப்பானா... கிளைய வெட்டக்கூடாதுய்யா... ஊழல்ன்ற மரத்தையே வெட்டிச்சாய்க்கனும்... இந்த மாதிரி அம்புட்டு அரசு ஆஸ்பத்திரியிலயும் நடக்குது... டெச்சர்ல வச்சித் தள்ளுறதுக்கு... சக்கர நாற்காலியில வச்சி தள்ளுறதுக்கு-... ஆப்ரேசன்க்கு அப்புறம் பெட்ல கொண்டாந்து போடுறதுக்கு... உசுரோட இருக்குறவரைக்கும் அம்புட்டுக்கும் காசுன்னு பாத்தா இப்ப செத்தப்பிறகும் காசு தேவப்படுது..." என்று தளுதளுததார் மாரிச்சாமி...
"இந்த போட்டாதான் சந்தி சிரிச்சுப்போச்சுல... இனி மேலாச்சும் இந்த மாதிரியான சேவைகள் இலவசமா கிடைக்க அந்த மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்கட்டும்... அதுக்கான ஏற்பாட்ட செய்யட்டும்..." என்று வெள்ளையன் சொல்லிய வெள்ளையன் "டீயக்குடிய்யா ஆறுது" என்றார்.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...