Skip to main content

இடம்: மதுரை அரசு மருத்துவமனை அருகில் உள்ள டீக்கடை


"இப்டியொரு அக்கிரமமெல்லாம் நம்மநாட்லதான்யா நடக்குது" என்று விரக்தியாக சொல்லியபடியே வந்து குந்தினார் மாரிச்சாமி.
ஏற்கெனவே அவருக்கு முன்பாக வந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளையன், "என்னய்யா அக்குருமத்தக் கண்டுட்ட?" என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டார்.
"ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொல்றேம்ப்பா" என்று ஆரம்பித்த அவர் "சூடா ஒரு டீ போடுப்பா" என்று கேட்டார்.
"நீங்களே சூடாத்தான வந்திருக்கீங்க... மொதல்ல நடந்ததச் சொல்லுங்க" என்றதும்... படபடவென பொரிந்தார் மாரிச்சாமி...
"ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொன்றேன்ப்பா... அந்த மாநிலத்துல இருக்கிற கலஹண்டி பகுதியைச் சேர்ந்தவரு தனா மஜி. இவரு சம்சாரம் அமன்கடிக்கு உடம்பு சவுரியமில்ல. படக்-குன்னு அங்கனக்குள்ள இருக்க ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போனாரு. ஆனா சிகிச்சை பலனனிக்காம அந்த அம்மா செத்துப்போச்சு."
"அதுக்கு ஏன்யா நீ இந்தக்குதி குதிக்கிற... பொறப்பு எறப்பு சகசம்" என்று பேச்சை முடிக்கப்பார்த்தார் வெள்ளையன்.
"சொல்றத முழுசாக்கேளுய்யா... இதுக்கப்பறம்தான் அந்த அக்குருமம் நடந்திருக்கு... இவரு ஊரு ஆஸ்பத்திரியில இருந்து 60 கிலோ மீட்டர் தூரம் இருக்கு... அதனால பொணத்தை கொண்டு போக ஆம்புலன்ஸ் வேணும்னு கேட்டிருக்காரு... ஆனா ஆஸ்பத்திரிக்காரய்ங்க அதெல்லாம் முடியாதுன்னு ரொம்வும் ட்ரிக்ட்டா சொல்லீட்டாய்ங்க..."
"அப்பறம்?"
"என்னா செய்யிறதுன்னு தனா கொழம்பிப்போயிட்டாரு... பக்கத்துல அவரு மக அழுதுக்கிட்டே நிக்கிது... படக்குன்னு மனச கல்லாக்கிக்கிட்டு... பொனத்தை ஒரு பாயில சுத்தி இன்னொரு போர்வையையும் மேல சுத்தி இறுக்கமாக கட்டிட்டாரு. அப்புறம் படக்குன்னு தூக்கி தோள்ல வச்சிக்கிட்டு நடையக் கட்டிட்டாரு..."
"அடக்கொடுமையே..."
"அட ஆமான்றேன்... இவரு பொணத்த தூக்கிக்கிட்டு முன்ன நடந்துபோக... அவரு மக அழுதுக்கிட்டே பின்ன வர... ஊரே வேடிக்கை பாக்குதுய்யா..."
"அத போட்டா புடிச்சி ஒரு பத்திரிகையில செய்தி வந்திருக்கு... ஒருத்தன் இத இப்ப என்னம்மோ பேஸ்புக்குன்றாய்ங்களே அதுல பரப்பி விட்டிருக்கான்... அதனாலதான் இந்த விஷயம் இந்தியா முழுக்கப் பரவி சந்தி சிரிக்கிது இந்திய மானம்..."
"ஏன் போட்டா புடிச்சவன் இவருக்கு ஆதரவா ஆஸ்பத்திரிக்காரன்ட்ட சண்ட பிடிச்சிருக்கலாம்ல.. இல்ல ஆம்புலன்ஸ்க்கு காசு குடுத்திருக்கலாம்ல...?" என்று வெள்ளையன் கேக்க..
"காசு குடுத்திருந்தா அப்போதைக்கு பிரச்சன முடிச்சிருக்கும்... அடுத்து ஒருஒரு பொணத்துக்கு-ம் ஒருஒருத்தன் காசு குடுப்பானா? இல்ல கெடைப்பானா... கிளைய வெட்டக்கூடாதுய்யா... ஊழல்ன்ற மரத்தையே வெட்டிச்சாய்க்கனும்... இந்த மாதிரி அம்புட்டு அரசு ஆஸ்பத்திரியிலயும் நடக்குது... டெச்சர்ல வச்சித் தள்ளுறதுக்கு... சக்கர நாற்காலியில வச்சி தள்ளுறதுக்கு-... ஆப்ரேசன்க்கு அப்புறம் பெட்ல கொண்டாந்து போடுறதுக்கு... உசுரோட இருக்குறவரைக்கும் அம்புட்டுக்கும் காசுன்னு பாத்தா இப்ப செத்தப்பிறகும் காசு தேவப்படுது..." என்று தளுதளுததார் மாரிச்சாமி...
"இந்த போட்டாதான் சந்தி சிரிச்சுப்போச்சுல... இனி மேலாச்சும் இந்த மாதிரியான சேவைகள் இலவசமா கிடைக்க அந்த மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்கட்டும்... அதுக்கான ஏற்பாட்ட செய்யட்டும்..." என்று வெள்ளையன் சொல்லிய வெள்ளையன் "டீயக்குடிய்யா ஆறுது" என்றார்.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...