Skip to main content

இடம் : பெங்களூரு பேருந்து நிலையம் அருகே...

பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன... புகையின் நெடி உடலெங்-கும் பரவுகிறது... பேருந்தில் பயணித்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள்... 
அந்த வெப்பத் தகிப்பிலும் இருவர் பேசிக் கொள்கிறார்கள்... இருவரும் தமிழ்நாட்டுக்காரர்கள் என்று அவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது... 
பச்சை சட்டை போட்டவர் பார்ப்பதற்கு கொஞ்சம் அப்பாவியாக இருந்தார். தீ எரியும் வெப்பத்திலிருந்து சற்று விலகி நின்ற அவர், சற்றுநேரம் பையை கீழே வைத்து விட்டு “என்னய்யா கொடும... 42 பஸ்களை எரிச்சிட்டானுங்க... தண்ணி மாட்டோம்ன்றதுக்கு இப்டியெல்லாம் கலவரம் பண்ணணுமா?” என்று கத்தினார்... 
அவர் அப்படிக் கத்தியும் “என்னங்க... பஸ்ஸை எரிச்சதச் சொல்றீங்களா?” என்று கோடுபோட்ட சட்டைக்காரர் கேட்டுவிட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஒருவாறாக கிரகித்துக் கொண்டார். பின்பு அவரும் பையை கீழே வைத்துவிட்டுத் தொடர்ந்தார்...
“இப்டியெல்லாம் கலவரம் பண்ணிப்பண்ணிதானே பேசித் தீர்க்க வேண்டிய அவ்வளவு விஷயத்திலேயும் நாட்டை அழிச்சிக்கிட்டிருக்கோம்...” என்று இவரும் கத்தியபடியே சொன்னார்.
“என்னா பேசித் தீர்க்கணும்ன்றீங்க...? அதான் சுப்ரீம் கோர்ட்டே தண்ணி திறந்து விடச்சொல்லீருக்கு... கர்நாடக கவுர்மென்டும் தண்ணி திறந்து விட்டிருக்கு... இதுல இவனுங்களுக்கு என்ன வந்துச்சு...? பஸ்ஸை எரிக்கிறானுங்க... அதுவும் ஒரு பொம்பளப்புள்ள பசங்ககிட்ட பெட்ரோல் குடுத்து பஸ்களை எரிக்கச் சொல்லுச்சாம்ல...? “ என்று ஆச்சரித்தோடு கேட்டார் பச்சை சட்டை.
“உண்மைதான் அந்தப் பிள்ளைபேரு பாக்யாவாம்... பஸ் எரிப்பு நடந்த இடத்துலதான் வீடாம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த ஏரியாவுக்கு வந்திருக்கு... ரெம்ப கஷ்டப்படுற குடும்பமாம்... இதை கவனிச்ச யாரோதான் இந்த பிள்ளையை பஸ் எரிப்புக்கு கருவியா பயன்படுத்தியிருப்பதாகச் சொல்றாங்க...”
“எல்லா எடத்துக்கும் ஒண்ணுந்தெரியாத அப்பாவிப் பையனும் பிள்ளைகளும்தான்யா இந்த அரசியல் வியாபரம் பண்றவங்களுக்கு கிடைக்கிறாங்க... நேத்து நம்மூர்ல விக்னேஷ்ன்ற பையன் காவிரி நீரை குடுக்கணும்னு தீக்குளிச்சி செத்துப்போய்ட்டான்... இந்த ஊர்ல பொம்பளப்புள்ளைட்ட பெட்ரோல் கேன்களை கொடுத்து பஸ்களை எரிக்க விட்டிருக்கானுங்க... இப்ப பாருங்க பாக்யாவ கைது பண்ணி பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல்னு ஏகப்பட்ட பிரிவுல வழக்குப்பதிவு பண்ணியிருக்காங்க... இனி அந்த பாக்யாவும் செத்த பொணம் மாதிரிதான்” என்று மருகினார் கோடு போட்ட சட்டை.
“பாவம் சார்... அரசியல்வியாபாரிகளின் உள்நோக்கம் புரியாமல் வெற்றுப்பேச்சு மயங்குகிறவர்களின் கெதியைப் பாத்தீங்களா...?” என்று பரிதாபப்பட்ட பச்சை சட்டை... “உண்மையிலேயே இவங்க கர்நாடக விவசாயிகளுக்காகத்தான் பஸ்களை எரித்து கலவரம் பண்றாங்களாண்ணே?” என்று சந்தேகத்தோடு கேட்டார்.
மெதுவாகச் சிரித்த அவர், “அரசியல்ணே அம்புட்டும் அரசியல்... அனைத்தும் தேர்தலை முன்னிட்டும், ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்றும் செய்யும் அரசியல். இதில் அப்பாவி தமிழர்கள் கன்னடர்களிடம் அடி வாங்குகிறார்கள்... காவிரி நீருக்காக என்று சொல்லி தமிழகத்தில் தீக்குளித்துக் கொள்கிறார்கள்... அப்பாவி கர்நாடக இளைஞர்களோ அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்...” என்று பொரிந்தார்.
பச்சை சட்டைக்கு தூக்கிவாறிப்போட்டது. “என்னண்ணே நடக்குது நம்மளச்சுத்தி... அப்ப விவசாயிகளுக்காக யாருமே இல்லையா?” என்று ஆனமட்டும் கத்தினார்...
அந்த சத்தம் பற்றி எரியும் பேருந்துகளின் தீ யோடு சேர்ந்து எரிந்தே போனது...

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...