Skip to main content

இடம் : பெங்களூரு பேருந்து நிலையம் அருகே...

பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன... புகையின் நெடி உடலெங்-கும் பரவுகிறது... பேருந்தில் பயணித்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள்... 
அந்த வெப்பத் தகிப்பிலும் இருவர் பேசிக் கொள்கிறார்கள்... இருவரும் தமிழ்நாட்டுக்காரர்கள் என்று அவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது... 
பச்சை சட்டை போட்டவர் பார்ப்பதற்கு கொஞ்சம் அப்பாவியாக இருந்தார். தீ எரியும் வெப்பத்திலிருந்து சற்று விலகி நின்ற அவர், சற்றுநேரம் பையை கீழே வைத்து விட்டு “என்னய்யா கொடும... 42 பஸ்களை எரிச்சிட்டானுங்க... தண்ணி மாட்டோம்ன்றதுக்கு இப்டியெல்லாம் கலவரம் பண்ணணுமா?” என்று கத்தினார்... 
அவர் அப்படிக் கத்தியும் “என்னங்க... பஸ்ஸை எரிச்சதச் சொல்றீங்களா?” என்று கோடுபோட்ட சட்டைக்காரர் கேட்டுவிட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஒருவாறாக கிரகித்துக் கொண்டார். பின்பு அவரும் பையை கீழே வைத்துவிட்டுத் தொடர்ந்தார்...
“இப்டியெல்லாம் கலவரம் பண்ணிப்பண்ணிதானே பேசித் தீர்க்க வேண்டிய அவ்வளவு விஷயத்திலேயும் நாட்டை அழிச்சிக்கிட்டிருக்கோம்...” என்று இவரும் கத்தியபடியே சொன்னார்.
“என்னா பேசித் தீர்க்கணும்ன்றீங்க...? அதான் சுப்ரீம் கோர்ட்டே தண்ணி திறந்து விடச்சொல்லீருக்கு... கர்நாடக கவுர்மென்டும் தண்ணி திறந்து விட்டிருக்கு... இதுல இவனுங்களுக்கு என்ன வந்துச்சு...? பஸ்ஸை எரிக்கிறானுங்க... அதுவும் ஒரு பொம்பளப்புள்ள பசங்ககிட்ட பெட்ரோல் குடுத்து பஸ்களை எரிக்கச் சொல்லுச்சாம்ல...? “ என்று ஆச்சரித்தோடு கேட்டார் பச்சை சட்டை.
“உண்மைதான் அந்தப் பிள்ளைபேரு பாக்யாவாம்... பஸ் எரிப்பு நடந்த இடத்துலதான் வீடாம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த ஏரியாவுக்கு வந்திருக்கு... ரெம்ப கஷ்டப்படுற குடும்பமாம்... இதை கவனிச்ச யாரோதான் இந்த பிள்ளையை பஸ் எரிப்புக்கு கருவியா பயன்படுத்தியிருப்பதாகச் சொல்றாங்க...”
“எல்லா எடத்துக்கும் ஒண்ணுந்தெரியாத அப்பாவிப் பையனும் பிள்ளைகளும்தான்யா இந்த அரசியல் வியாபரம் பண்றவங்களுக்கு கிடைக்கிறாங்க... நேத்து நம்மூர்ல விக்னேஷ்ன்ற பையன் காவிரி நீரை குடுக்கணும்னு தீக்குளிச்சி செத்துப்போய்ட்டான்... இந்த ஊர்ல பொம்பளப்புள்ளைட்ட பெட்ரோல் கேன்களை கொடுத்து பஸ்களை எரிக்க விட்டிருக்கானுங்க... இப்ப பாருங்க பாக்யாவ கைது பண்ணி பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல், கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல்னு ஏகப்பட்ட பிரிவுல வழக்குப்பதிவு பண்ணியிருக்காங்க... இனி அந்த பாக்யாவும் செத்த பொணம் மாதிரிதான்” என்று மருகினார் கோடு போட்ட சட்டை.
“பாவம் சார்... அரசியல்வியாபாரிகளின் உள்நோக்கம் புரியாமல் வெற்றுப்பேச்சு மயங்குகிறவர்களின் கெதியைப் பாத்தீங்களா...?” என்று பரிதாபப்பட்ட பச்சை சட்டை... “உண்மையிலேயே இவங்க கர்நாடக விவசாயிகளுக்காகத்தான் பஸ்களை எரித்து கலவரம் பண்றாங்களாண்ணே?” என்று சந்தேகத்தோடு கேட்டார்.
மெதுவாகச் சிரித்த அவர், “அரசியல்ணே அம்புட்டும் அரசியல்... அனைத்தும் தேர்தலை முன்னிட்டும், ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்றும் செய்யும் அரசியல். இதில் அப்பாவி தமிழர்கள் கன்னடர்களிடம் அடி வாங்குகிறார்கள்... காவிரி நீருக்காக என்று சொல்லி தமிழகத்தில் தீக்குளித்துக் கொள்கிறார்கள்... அப்பாவி கர்நாடக இளைஞர்களோ அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள்...” என்று பொரிந்தார்.
பச்சை சட்டைக்கு தூக்கிவாறிப்போட்டது. “என்னண்ணே நடக்குது நம்மளச்சுத்தி... அப்ப விவசாயிகளுக்காக யாருமே இல்லையா?” என்று ஆனமட்டும் கத்தினார்...
அந்த சத்தம் பற்றி எரியும் பேருந்துகளின் தீ யோடு சேர்ந்து எரிந்தே போனது...

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...