Skip to main content

ஆணாதிக்கமும் நிலவுடைமை கொடுத்த தைரியமும்



பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் சீரழித்த பெண்கள் 1500க்கு மேல் இருக்குமாம். இவர்களில் திருமணமான பிராமண பெண்கள், அவர்களுடைய வீட்டு இளம்பெண்களும் இதில் அடக்கம் என்கிறார்கள்...
எல்லாவற்றையும் போலீஸ் உதவியோடு அதிமுகவினர் மறைத்துவிட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமான கவுண்டர் பெண்களும் இருக்கிறார்களாம். கோவை பகுதியில் உள்ள கல்லூரிகளில் அழகான பெண்களை இந்த கும்பல் சுற்றிவந்து கடத்தி கற்பழிப்பது கடந்த 8 ஆண்டுகளாக தொடர்கதையாம்...
வெளியாகும் தகவல்கள் பொள்ளாச்சியை மட்டுமல்ல தமிழகத்தையே நடுங்க வைக்கின்றன...
சின்னப்பம் பாளையம்
பண்ணை வீடு..
பண்ணையார் வீட்டுப் பையன் திருநாவுக்கரசு அவனது நண்பன் ஆச்சிப்பட்டி மணிகண்டன்,சபரிராஜன் என்கிற ரிஸ்வந்த்,வசந்தகுமார், கெரோன்,அதிமுக 'பார்' நாகராஜன் உள்ளிட்ட பத்து பேர் சேர்ந்து செய்திருக்கிற காமவெறியாட்டமும் மாட்டை அடிப்பதைப்போல பெண்களை அடிக்கும் கொடூர சம்பவங்களும் மனதை பதைபதைக்க வைத்திருக்கின்றன.
வேலைக்காகவும், கல்லூரிக்குப் படிக்கவும் வரும் இளம்பெண்களை தமது பணத்தாலும் காதல் வார்த்தைகளாலும் வசப்படுத்தி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பண்ணை வீட்டில் வைத்து, கூட்டுப் பாலியல் வன்முறை செய்து வீடியோ எடுத்துள்ளனர் இந்த கொடூர வெறிப்பிடித்த ஓநாய்க்கூட்டங்கள்.
மொத்தமாக,1100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியுள்ள நிலையில், இந்தக் கும்பலிடம் சீரழிந்த பெண்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகமாக உள்ளதாக வரும் செய்திகள் நம்மை மூர்ச்சை அடையச் செய்கின்றன..
எடுத்த வீடியோக்களை அதிகார பலமிக்க அரசியல் பெரும்புள்ளிகளுக்கு அனுப்பியதுடன், அவர்கள் விரும்பிய பெண்களையும் வீடியோக்களை வைத்தே மிரட்டி, கூட்டிக் கொடுத்துள்ளனர்.
காட்டியும் கூட்டியும் கொடுப்பதற்கு காரணம் நிலவுடைமையும், ஜாதி ஆணவமும், அரசியலும் சேர்ந்து நிகழ்த்திய பாலியல் வன்முறை ஆகும்.
ஒரு வகையில் இதுதான் தமிழகத்தின் அத்தனை அசைவினையும் தீர்மானிக்கும் சமூக பொருளாதாரக் கூட்டணியுமாகும்.
இந்த மைனர்த்தனமான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கவே நாட்டாமை,சூர்யவம்சம்,கவுண்டர் வீட்டுப்பொண்ணு,தேவர் மகன்,எஜமான் உள்ளிட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதையெல்லாம் கைதட்டி ரசித்தவர்கள் இதற்குப்பின்னால் உள்ள சமூக அடுக்குகளை கண்டும் காணாமல் விட்டதன் பின்னணிதான் இத்தனை வக்கிரங்களுக்கும் காரணம்.
நன்கு படித்த வசதியுள்ள பட்டியலின இளைஞர்கள் ஒரு சிலர் ஜாதியை மீறிக் காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொண்டபோது, அதை காதல் நாடகமென வர்ணித்து ஆணவக் கொலைகளைத் தூண்டிய பாமக ராமதாசும் அவரது அடிப்பொடிகளும் இப்போது நடந்துள்ள கண்டு கள்ள மௌனம் காத்து வருகின்றனர்.
காதலர் தினம் வந்தவுடன் கலாச்சாரக் காவலர் அவதாரம் எடுக்கும் காவிக்கூட்டங்களும் இப்போது வாய் திறக்கவில்லை.
தமிழ்க் கலாச்சாரவாதிகள் பரப்பில் திருடனுக்குத் தேள் கொட்டியது போன்ற மௌனம் நிலவக் காரணம், இதில் நேரடியாகச் சிக்கியிருப்பது இவர்களின் தறுதலைப் பிள்ளைகளே.
இவர்கள் தான் சமூக ஊடகங்களில் ஷத்ரிய உளறல்களை ஆண்ட ஜாதி ஆணவக் கதைகளைப் பரப்பி வருபவர்கள்.
மறுபுறம், இவர்களே ஒழுக்கம் பண்பாடு பற்றி மொத்தச் சமூகத்துக்கும் பாடம் எடுப்பவர்கள். ஆனால், பிட்டுப் படம் எடுப்பதும் பாலியல் வல்லுறவுமே இவர்களது அசல் முகமாக இருக்கிறது.
தேர்தல் வெற்றி தோல்வியைத் தாண்டி, இந்த ஜாதி ஆணவ மதவெறிக் கும்பலானது, சமூக அமைதிக்கு மட்டுமல்ல குற்றச் சமூகங்களின் பாலியல் வணிகத்துக்கும் அடாவடிகளுக்குமே சாதகமாக இயங்கவல்லது என்பது குறித்து, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் பேசி, விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.
ஆண்டபரம்பரை பேசி சமூகத்தை சீரழிக்கும் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீதும், திருமணம் உள்ளிட்ட விஷேசங்களில் சாதிப்பெருமை பேசி பிளக்ஸ் அடிப்போர் மீதும் காவல்துறை ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...