Skip to main content

அபிநந்தன் என்னும் பெயரில் பெரியாரின் பங்கு

அபிநந்தன் என்ன சாதி என்று கூகுளில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் தேடியிருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய - பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது.
இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது.
இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான். அதன்படியே விடுதலையும் ஆனால் தமிழக வீரர் அபிந்நதன்.
இப்படியெல்லாம் நாம் அபிநந்தனின் வீரத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பெருந்தன்மையையும் புகழ்ந்து கொண்டிருக்க சாதி வெறியர்கள் அல்லது அபிநந்தன் தங்கள் சாதி மீது மென்மையான போக்கு உள்ளவர்கள் அபிநந்தன் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று தேடியிருக்கிறார்கள் என்று கூகுள் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே அபிநந்தன் கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ அல்லது வடமாநிலங்களிலோ பிறந்திருந்தால் அபிநந்தன் நாயர், அபிநந்தன்ரெட்டி, அபிநந்தன் முகர்ஜி, அபிநந்தன் நாயுடு என்றெல்லாம் அவரது ஜாதி பெயரிலேயே இருந்திருக்கும்... ஆனால் அவர் பிறந்தது தமிழ்நாட்டில் அல்லவா.
1928ம் ஆண்டிலேயே நீதிக்கட்சி மாநாட்டில் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். அது முதற்கொண்டு பலர் தங்களின் பெயருக்குப்பின்னால் ஒட்டிக்கொண்டிந்த சாதிப்பெயர்களை வெட்டி எறிந்தார்கள்.
நீங்கள் உங்கள் தந்தை காலத்தில் அடிக்கப்பட்ட கல்யாண பத்திரிகையையும் இப்போது உங்கள் கல்யாணத்தில் அடிக்கப்படும் கலயாண பத்திரிகையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... அதில் தாத்தாக்களின் பெயர்களுக்குப்பின்னால்தான் சாதி இருக்கும். மற்ற யாருக்கும் சாதி அடையாளங்கள் இருக்காது. இப்போது மூன்றாவது தலைமுறையில் தாத்தாக்களின் பெயர்களிலும் சாதி இருக்காது என்ற நிலை வந்து விட்டது.
இப்படியாக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பெரியார் சாதித்ததுதான் இது.
ஆனால் இவ்விதம் சாதி அடையாளத்தை துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் அவரின் பெயருக்குப்பின்னால் குரூப் 2 வினாத்தாளில் ராமசாமி நாயக்கர் என்று அச்சேற்றி சுகம் கண்டவர்கள்தான் நமது சோ கால்டு அறி(வீ)வாளிகள்...
சாதி ரீதியான பார்வையைத் தவிர்ப்போம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வாழ்வோம்...

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...