அபிநந்தன் என்ன சாதி என்று கூகுளில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் தேடியிருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய - பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது.
இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது.
இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான். அதன்படியே விடுதலையும் ஆனால் தமிழக வீரர் அபிந்நதன்.
இப்படியெல்லாம் நாம் அபிநந்தனின் வீரத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பெருந்தன்மையையும் புகழ்ந்து கொண்டிருக்க சாதி வெறியர்கள் அல்லது அபிநந்தன் தங்கள் சாதி மீது மென்மையான போக்கு உள்ளவர்கள் அபிநந்தன் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று தேடியிருக்கிறார்கள் என்று கூகுள் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே அபிநந்தன் கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ அல்லது வடமாநிலங்களிலோ பிறந்திருந்தால் அபிநந்தன் நாயர், அபிநந்தன்ரெட்டி, அபிநந்தன் முகர்ஜி, அபிநந்தன் நாயுடு என்றெல்லாம் அவரது ஜாதி பெயரிலேயே இருந்திருக்கும்... ஆனால் அவர் பிறந்தது தமிழ்நாட்டில் அல்லவா.
1928ம் ஆண்டிலேயே நீதிக்கட்சி மாநாட்டில் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். அது முதற்கொண்டு பலர் தங்களின் பெயருக்குப்பின்னால் ஒட்டிக்கொண்டிந்த சாதிப்பெயர்களை வெட்டி எறிந்தார்கள்.
நீங்கள் உங்கள் தந்தை காலத்தில் அடிக்கப்பட்ட கல்யாண பத்திரிகையையும் இப்போது உங்கள் கல்யாணத்தில் அடிக்கப்படும் கலயாண பத்திரிகையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... அதில் தாத்தாக்களின் பெயர்களுக்குப்பின்னால்தான் சாதி இருக்கும். மற்ற யாருக்கும் சாதி அடையாளங்கள் இருக்காது. இப்போது மூன்றாவது தலைமுறையில் தாத்தாக்களின் பெயர்களிலும் சாதி இருக்காது என்ற நிலை வந்து விட்டது.
இப்படியாக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பெரியார் சாதித்ததுதான் இது.
ஆனால் இவ்விதம் சாதி அடையாளத்தை துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் அவரின் பெயருக்குப்பின்னால் குரூப் 2 வினாத்தாளில் ராமசாமி நாயக்கர் என்று அச்சேற்றி சுகம் கண்டவர்கள்தான் நமது சோ கால்டு அறி(வீ)வாளிகள்...
சாதி ரீதியான பார்வையைத் தவிர்ப்போம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வாழ்வோம்...
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய - பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது.
இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது.
இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான். அதன்படியே விடுதலையும் ஆனால் தமிழக வீரர் அபிந்நதன்.
இப்படியெல்லாம் நாம் அபிநந்தனின் வீரத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பெருந்தன்மையையும் புகழ்ந்து கொண்டிருக்க சாதி வெறியர்கள் அல்லது அபிநந்தன் தங்கள் சாதி மீது மென்மையான போக்கு உள்ளவர்கள் அபிநந்தன் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று தேடியிருக்கிறார்கள் என்று கூகுள் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே அபிநந்தன் கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ அல்லது வடமாநிலங்களிலோ பிறந்திருந்தால் அபிநந்தன் நாயர், அபிநந்தன்ரெட்டி, அபிநந்தன் முகர்ஜி, அபிநந்தன் நாயுடு என்றெல்லாம் அவரது ஜாதி பெயரிலேயே இருந்திருக்கும்... ஆனால் அவர் பிறந்தது தமிழ்நாட்டில் அல்லவா.
1928ம் ஆண்டிலேயே நீதிக்கட்சி மாநாட்டில் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். அது முதற்கொண்டு பலர் தங்களின் பெயருக்குப்பின்னால் ஒட்டிக்கொண்டிந்த சாதிப்பெயர்களை வெட்டி எறிந்தார்கள்.
நீங்கள் உங்கள் தந்தை காலத்தில் அடிக்கப்பட்ட கல்யாண பத்திரிகையையும் இப்போது உங்கள் கல்யாணத்தில் அடிக்கப்படும் கலயாண பத்திரிகையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... அதில் தாத்தாக்களின் பெயர்களுக்குப்பின்னால்தான் சாதி இருக்கும். மற்ற யாருக்கும் சாதி அடையாளங்கள் இருக்காது. இப்போது மூன்றாவது தலைமுறையில் தாத்தாக்களின் பெயர்களிலும் சாதி இருக்காது என்ற நிலை வந்து விட்டது.
இப்படியாக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பெரியார் சாதித்ததுதான் இது.
ஆனால் இவ்விதம் சாதி அடையாளத்தை துடைத்தெறிந்த தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் அவரின் பெயருக்குப்பின்னால் குரூப் 2 வினாத்தாளில் ராமசாமி நாயக்கர் என்று அச்சேற்றி சுகம் கண்டவர்கள்தான் நமது சோ கால்டு அறி(வீ)வாளிகள்...
சாதி ரீதியான பார்வையைத் தவிர்ப்போம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வாழ்வோம்...
Comments
Post a Comment