பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் தலைமையிலான கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் சிலர் முதன்முதலாக ஆரம்பித்து வைத்தார்கள் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தை சந்திக்கும் படலத்தை...
அதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வந்து நலம் விசாரித்து விட்டுப்போனார். இது சாதாரண சந்திப்புத்தான் அரசியல் இல்லை என்று இருதரப்பினரும் சொன்னார்கள்.
விஜயகாந்த் உங்களோடு கூட்டணி வைக்கப்போகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் உங்கள் நல்ல எண்ணம் நிறைவேறட்டும் என்று மட்டும் சொல்லி வைத்தார்.
அடுத்ததாக ரஜினிகாந்த் வந்து பார்த்துவிட்டுப்போனார். ரஜினிகாந்த் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டதால் இது சாதாரண சந்திப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் யாருக்கேணும் ஆதரவு தெரிவிக்கலாம் என்று அறிவுரைகூட சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என்று நாம் ஒருவாறாக உணர்ந்து கொள்ளலாம்.
அதன்பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் விஜயகாந்தை தொடர்பு கொண்டு கமல் சந்திக்க நேரம் கோரினார்கள்.
இத்தனை சந்திப்புகள் நிகழ்ந்த பின்னரும் கிணற்றில் போட்ட கல்லாக இந்த நிகழ்வுகள் நடந்தேறின. அதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது தம்பி சுதீஷ், மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் தேமுதிகவின் பலத்தை வானளாவ புகழ்ந்தார்கள். தாங்கள் இல்லையென்றால் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற முடியாது என்ற அளவுக்கு அவர்களின் பேச்சு அமைந்திருந்தது.
அதன்பிறகு வந்த செய்திகள் விஜயகாந்த் அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தின. இதனால் இனி நம்முடன் வர மாட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட திமுக 20 க்கு 20 என்ற அளவில் கூட்டணி அமைத்து தனது நிலையை தெளிவுபடுத்தி அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.
இந்நிலையில் திடீரென்று மீண்டும் திமுக பொருளாளர் துரைமுருகனை தொடர்பு கொண்ட சுதீஷ், அதிமுகவில் சேருவது பிடிக்கவில்லை திமுகவிடம் வருகிறோம் என்று கூறியிருக்கிறார். இதனால் காண்டான துரைமுருகன் "கூட்டணிக்கதவுகள் சாத்தப்பட்டு விட்டன. தலைவர் ஊரில் இல்லை. வந்தவுடன் சொல்கிறேன். உங்களுக்கு கொடுக்க எங்களிடம் சீட் இல்லை. உங்கள் பலத்திற்கு ஏற்ற அளவில் சீட் கொடுக்கும் கட்சியுடன் சேருங்கள்" என்று கிண்டலாவே கூறிவிட்டார்.
இப்படி ஒரே நேரத்தில் இரு வண்டியில் சவாரி செய்ய தேமுதிக முயன்றிருப்பது அரசியல் அரங்கில் தேமுதிக மீது தவறான பார்வையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் சுதீசும், பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் ஆகியோர்தான் காரணம் என்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் புலம்புகிறார்கள்.
வடிவேல் ஒரு படத்தில் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது "நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்..."
வாக்கு அரசியலில் அனைத்துமே சரிதான். ஆனால் கூட்டணி அமைப்பதில் ஒரு நெறிமுறையையாவது கடைப்பிடிக்க வேண்டாமா?
அதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வந்து நலம் விசாரித்து விட்டுப்போனார். இது சாதாரண சந்திப்புத்தான் அரசியல் இல்லை என்று இருதரப்பினரும் சொன்னார்கள்.
விஜயகாந்த் உங்களோடு கூட்டணி வைக்கப்போகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் உங்கள் நல்ல எண்ணம் நிறைவேறட்டும் என்று மட்டும் சொல்லி வைத்தார்.
அடுத்ததாக ரஜினிகாந்த் வந்து பார்த்துவிட்டுப்போனார். ரஜினிகாந்த் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டதால் இது சாதாரண சந்திப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் யாருக்கேணும் ஆதரவு தெரிவிக்கலாம் என்று அறிவுரைகூட சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என்று நாம் ஒருவாறாக உணர்ந்து கொள்ளலாம்.
அதன்பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் விஜயகாந்தை தொடர்பு கொண்டு கமல் சந்திக்க நேரம் கோரினார்கள்.
இத்தனை சந்திப்புகள் நிகழ்ந்த பின்னரும் கிணற்றில் போட்ட கல்லாக இந்த நிகழ்வுகள் நடந்தேறின. அதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது தம்பி சுதீஷ், மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் தேமுதிகவின் பலத்தை வானளாவ புகழ்ந்தார்கள். தாங்கள் இல்லையென்றால் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற முடியாது என்ற அளவுக்கு அவர்களின் பேச்சு அமைந்திருந்தது.
அதன்பிறகு வந்த செய்திகள் விஜயகாந்த் அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தின. இதனால் இனி நம்முடன் வர மாட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட திமுக 20 க்கு 20 என்ற அளவில் கூட்டணி அமைத்து தனது நிலையை தெளிவுபடுத்தி அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.
இந்நிலையில் திடீரென்று மீண்டும் திமுக பொருளாளர் துரைமுருகனை தொடர்பு கொண்ட சுதீஷ், அதிமுகவில் சேருவது பிடிக்கவில்லை திமுகவிடம் வருகிறோம் என்று கூறியிருக்கிறார். இதனால் காண்டான துரைமுருகன் "கூட்டணிக்கதவுகள் சாத்தப்பட்டு விட்டன. தலைவர் ஊரில் இல்லை. வந்தவுடன் சொல்கிறேன். உங்களுக்கு கொடுக்க எங்களிடம் சீட் இல்லை. உங்கள் பலத்திற்கு ஏற்ற அளவில் சீட் கொடுக்கும் கட்சியுடன் சேருங்கள்" என்று கிண்டலாவே கூறிவிட்டார்.
இப்படி ஒரே நேரத்தில் இரு வண்டியில் சவாரி செய்ய தேமுதிக முயன்றிருப்பது அரசியல் அரங்கில் தேமுதிக மீது தவறான பார்வையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் சுதீசும், பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் ஆகியோர்தான் காரணம் என்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் புலம்புகிறார்கள்.
வடிவேல் ஒரு படத்தில் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது "நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்..."
வாக்கு அரசியலில் அனைத்துமே சரிதான். ஆனால் கூட்டணி அமைப்பதில் ஒரு நெறிமுறையையாவது கடைப்பிடிக்க வேண்டாமா?
Comments
Post a Comment