Skip to main content

இரு வண்டியில் சவாரி செய்தவர் குப்புற விழுந்த கதை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் தலைமையிலான கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் சிலர் முதன்முதலாக ஆரம்பித்து வைத்தார்கள் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தை சந்திக்கும் படலத்தை...
அதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வந்து நலம் விசாரித்து விட்டுப்போனார். இது சாதாரண சந்திப்புத்தான் அரசியல் இல்லை என்று இருதரப்பினரும் சொன்னார்கள்.
விஜயகாந்த் உங்களோடு கூட்டணி வைக்கப்போகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் உங்கள் நல்ல எண்ணம் நிறைவேறட்டும் என்று மட்டும் சொல்லி வைத்தார்.
அடுத்ததாக ரஜினிகாந்த் வந்து பார்த்துவிட்டுப்போனார். ரஜினிகாந்த் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டதால் இது சாதாரண சந்திப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் யாருக்கேணும் ஆதரவு தெரிவிக்கலாம் என்று அறிவுரைகூட சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என்று நாம் ஒருவாறாக உணர்ந்து கொள்ளலாம்.
அதன்பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் விஜயகாந்தை தொடர்பு கொண்டு கமல் சந்திக்க நேரம் கோரினார்கள்.
இத்தனை சந்திப்புகள் நிகழ்ந்த பின்னரும் கிணற்றில் போட்ட கல்லாக இந்த நிகழ்வுகள் நடந்தேறின. அதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது தம்பி சுதீஷ், மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் தேமுதிகவின் பலத்தை வானளாவ புகழ்ந்தார்கள். தாங்கள் இல்லையென்றால் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற முடியாது என்ற அளவுக்கு அவர்களின் பேச்சு அமைந்திருந்தது.
அதன்பிறகு வந்த செய்திகள் விஜயகாந்த் அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தின. இதனால் இனி நம்முடன் வர மாட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட திமுக 20 க்கு 20 என்ற அளவில் கூட்டணி அமைத்து தனது நிலையை தெளிவுபடுத்தி அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.
இந்நிலையில் திடீரென்று மீண்டும் திமுக பொருளாளர் துரைமுருகனை தொடர்பு கொண்ட சுதீஷ், அதிமுகவில் சேருவது பிடிக்கவில்லை திமுகவிடம் வருகிறோம் என்று கூறியிருக்கிறார். இதனால் காண்டான துரைமுருகன் "கூட்டணிக்கதவுகள் சாத்தப்பட்டு விட்டன. தலைவர் ஊரில் இல்லை. வந்தவுடன் சொல்கிறேன். உங்களுக்கு கொடுக்க எங்களிடம் சீட் இல்லை. உங்கள் பலத்திற்கு ஏற்ற அளவில் சீட் கொடுக்கும் கட்சியுடன் சேருங்கள்" என்று கிண்டலாவே கூறிவிட்டார்.
இப்படி ஒரே நேரத்தில் இரு வண்டியில் சவாரி செய்ய தேமுதிக முயன்றிருப்பது அரசியல் அரங்கில் தேமுதிக மீது தவறான பார்வையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் சுதீசும், பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் ஆகியோர்தான் காரணம் என்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் புலம்புகிறார்கள்.
வடிவேல் ஒரு படத்தில் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது "நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்..."
வாக்கு அரசியலில் அனைத்துமே சரிதான். ஆனால் கூட்டணி அமைப்பதில் ஒரு நெறிமுறையையாவது கடைப்பிடிக்க வேண்டாமா?

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...