Skip to main content

Posts

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...
Recent posts

வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியா மோடி?

மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன... அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்.... இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது. "நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்" என்று அவர் அடுக்கிய வரிசைக்கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெ...

அனைவருக்கும் பொதுவானவர்

கலைஞர் இருக்கும்போதும் இறந்தபின்னும் செய்தது அந்த போராட்டம்தான்... நேரிடையாக மோடியை சந்தித்து அவருக்கான இடத்தை மெரீனாவில் எளிதாக வாங்கியிருக்க முடியும் ஸ்டாலினால் ... ஆனால் சில சமாளிப்புகளை செய்திருக்க வேண்டும்... அதையெல்லாம் விடுத்து இங்கே உள்ள எடப்பாடியை சந்தித்து அதை அவர் மறுத்து அதன்பின் நீதிமன்றம் சென்று வாங்கியதே இப்போது கொண்டாடப்படும் விஷயமாகியிருக்கிறது... அதேபோன்றுதான் திருமாவளவன் விஷயத்திலும் நடந்திருக்கிறது... உதயசூரியன் சின்னத்தில் அவர் போட்டியிட்டு எளிதாக இந்த வெற்றியை ருசித்திருக்க முடியும். ஆனாலும் திருமாவளவன் என்பவர் இத்தனை நாட்களாக நடத்திய சமூகநீதி, சனாதன எதிர்ப்பு பிரச்சாரம், சாதிய ஒற்றுமை, சாதி ஒழிப்பு போன்ற பிரச்சார முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மக்களை எந்த அளவுக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள மேற்கொண்ட அபாயகரமான முயற்சியே பானைச் சின்னத்தில் அவர் போட்டியிட்டது... அந்த முயற்சியில் கடைசி நிமிடம் வரை சோதனை நிறைந்ததாக இருந்தாலும் போராடி அவர் பெற்ற வெற்றிதான் இப்போது கொண்டாடப்படும் விஷயமாகி விட்டது.... அதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலி...

விமர்சனக் கடிதம்

ஏழரைப் பங்காளி வகையறா நாவலுக்கான எனது விமர்சனக் கடிதம் -------------------------- -------------------------- - அன்புத்தோழர் அர்ஷியாவுக்கு வணக்கம் இந்தக் கடிதத்தை ஏற்கெனவே எழுதியிருக்க வேண்டும்... நேரமின்மை மற்றும் தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக இப்போதுதான் எழுத அமர்ந்திருக்கிறேன் ஒருவிதப் பெருமிதத்தோடு.... ஒரு நாவல் படித்து மிகுந்த உற்சாகத்தோடு நான் எழுதிய கடிதங்களில் இது இரண்டாவது கடிதம்... கதைக்குள்போகாமல் இவ்வளவுநேரம் பேசிக் கொண்டிருப்பது எனக்கு என்னவோபோல் இருக்கிறது... உள்ளே வந்து விடுகிறேன்... நாவலை ஆரம்பிக்கும்போது கதாபாத்திரங்களின் பெயர்கள், தொடர்ச்சியாக வாசிப்பதற்கு இடைஞ்சலை ஏற்படுத்தின... (நான் வாசித்த நாவல்களில் இஸ்லாமிய பெயர்கள் தாங்கிய முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்பதுகூட காரணமாக இருக்கலாம்) பின்னர் பக்கங்கள் செல்லச்செல்ல அந்தப் பெயர்கள் பரிச்சயமாகின. “நான் இப்படித்தான் வேண்டுமா வேண்டாமா” என்று தாவூது போல் முறுக்கிக் கொண்டன... வேண்டும் வேண்டும் என்று சொல்லியபடியே நான் படிக்க ஆரம்பித்தேன்... ராஜாக் சாயபு சேர்த்த சொத்து, அபீல்பீ மூலமா வந்த சொத்து உள்ளிட்ட சொத்துக்களை...

விடுதலைப்புலிகள் மற்றும் அதன் தலைவன் பிரபாகரனின் மாபெரும் தவறுகள்...

இயக்கத்தில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் ஒழிக்கப் பட்டனர். ஆலோசனை சொன்னவர்கள் அழிக்கப்பட்டனர். தனி ஈழத்திற்காக போராடிய மற்ற போராளிக் குழுக்களை இயக்கத்தினர் அரவணைத்துச் செல்லவில்லை. 1990க்குள் மற்ற போராளி இயக்கங்களை, அதில் உள்ளவர்களை அழித்து ஒழித்தனர். 1990 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து 28000 முஸ்லீம்களை வெளியேற்றினர் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை செய்தனர். இதனால் போரின்போது இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தமிழக அரசியல்வாதிகளால் முடியாமற் போன நிலைமையை ஏற்படுத்தினர். கருணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்பின்னர் சந்திரிகா காலம் வரை விடுதலைப் புலிகளின் இடங்களைப் பற்றி சிங்கள அரசுக்கு எதுவும் தெரியாத நிலையில் கருணா சொல்லிய அனைத்து தகவல்களும் இலங்கை ராணுவத்திற்கு பேருதவியாய் இருந்தன... பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் அழித்தொழிக்கப்பட்டார்கள்... இயக்கத்தினரின் பேரழிவிற்குக் காரணம் கருணாவின் ஸ்கெட்ச். அடிப்படைக்காரணம் யார் ஆலோசனையையும் மாற்றுக்கருத்துக்களையும் கேட்காதது... அவர்கள் அரசியல் பாதைக்கு திரும்பாததே முக்கிய...

மக்கள் பக்கம் திரும்புவார்களா இந்த அரசியல்வாதிகள்?

"மேகமாக இருந்ததால் போர்விமானங்களை பாகிஸ்தானால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் இப்போது தாக்குங்கள்,' என ராணுவத்துக்கு ஐடியா கொடுத்தேன்," என மோடி பேசியிருக்கிறார். வழக்கம்போல மோடியின் அடிபொடிகள் "ஆஹா... செம ஐடியாக்காரன்பா," என மோடியைப் புகழ்கிறார்கள். அறிவுள்ள மீதி உலகம் கிண்டல் செய்கிறது. இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒருவர் இருக்கிறார். அவர் சீமான். அவர் அள்ளிவிட்ட பொய்கள் சொல்லி மாளாது. ஆமைக்கறி சாப்பிட்டது, ஆமை ஓட்டைத் திருப்பி போட்டு படகாக மாற்றி பயணம் செய்தது, அரிசிக்கப்பலைக் கடத்தியது, 1 லட்சம் யானைகளை போர்க்கப்பலில் ஏற்றிச் சென்று போரிட்டது, நம்மாழ்வார் பலாமரத்தைக் கட்டிப்பிடித்து அதனை பழம் பழுக்கும்படி செய்தது, ஏ.கே.74 துப்பாக்கியை பயன்படுத்தியது, கலைஞரின் பேனாவை எடுத்து எழுதும் அளவுக்கு பழக்கம், திருக்குறளை தப்புத்தப்பாக அர்த்தம் கற்பிப்பது, பிரபாகரன் இடத்தில் நான் இருந்திருந்தால் எப்போதோ தனி ஈழம் வாங்கியிருப்பேன் என்றது, எம்ஜிஆர் முதல்வராக பதிவியேற்ற போது பெரியார் வந்தார்ன்னு சொன்னது.. (எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்றபோ...

அபிநந்தன் என்னும் பெயரில் பெரியாரின் பங்கு

அபிநந்தன் என்ன சாதி என்று கூகுளில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் தேடியிருக்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய - பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது. இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது. இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான். அதன்படியே விடுதலையும் ஆனால் தமிழக வீரர் அபிந்நதன். இப்படியெல்லாம் நாம் அபிநந்தனின் வீரத்தையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பெருந்தன்மையையும் புகழ்ந்து கொண்டிருக்க சாதி வெறியர்கள் அல்லது அபிநந்தன் தங்கள் சாத...