Skip to main content

விமர்சனக் கடிதம்

ஏழரைப் பங்காளி வகையறா நாவலுக்கான
எனது விமர்சனக் கடிதம்
-----------------------------------------------------
அன்புத்தோழர் அர்ஷியாவுக்கு வணக்கம்

இந்தக் கடிதத்தை ஏற்கெனவே எழுதியிருக்க வேண்டும்... நேரமின்மை மற்றும் தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக இப்போதுதான் எழுத அமர்ந்திருக்கிறேன் ஒருவிதப் பெருமிதத்தோடு....

ஒரு நாவல் படித்து மிகுந்த உற்சாகத்தோடு நான் எழுதிய கடிதங்களில் இது இரண்டாவது கடிதம்... கதைக்குள்போகாமல் இவ்வளவுநேரம் பேசிக் கொண்டிருப்பது எனக்கு என்னவோபோல் இருக்கிறது...

உள்ளே வந்து விடுகிறேன்...

நாவலை ஆரம்பிக்கும்போது கதாபாத்திரங்களின் பெயர்கள், தொடர்ச்சியாக வாசிப்பதற்கு இடைஞ்சலை ஏற்படுத்தின... (நான் வாசித்த நாவல்களில் இஸ்லாமிய பெயர்கள் தாங்கிய முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்பதுகூட காரணமாக இருக்கலாம்) பின்னர் பக்கங்கள் செல்லச்செல்ல அந்தப் பெயர்கள் பரிச்சயமாகின. “நான் இப்படித்தான் வேண்டுமா வேண்டாமா” என்று தாவூது போல் முறுக்கிக் கொண்டன... வேண்டும் வேண்டும் என்று சொல்லியபடியே நான் படிக்க ஆரம்பித்தேன்...

ராஜாக் சாயபு சேர்த்த சொத்து, அபீல்பீ மூலமா வந்த சொத்து உள்ளிட்ட சொத்துக்களை வைத்துக் கொண்டு என்னசெய்வதென்றே தெரியாத தாவூதுவிடம், “வேலை செய்யாமல் எப்படி உங்களுக்கு பொழுது கழிகிறது?” என்று கேட்கும் அப்பாவித்தனம், அதை நாசூக்காக எடுத்துரைக்கும் பாங்கு நாவலின் கடைசிவரை அந்தப் பெண்ணின் தைரியத்தைச் சொல்லும் சாட்சிகள்...

பொசுக்கென்று வழிந்து விடுவதும்... பொசுக்கென்று கோபப்படுவதும்... இழந்தபின் இழக்காத கவுரவமும்... குழந்தைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு, பின் மனசுபொறுக்கமாட்டாமல் மீண்டும் வந்து அவர்களைத் தேடுவதில் உள்ள அன்புக்கோழைத்தனமும், மனைவியைக் காண முடியாமல் கூசிப்போகும் மனோசித்ரவதையும் தாவூதின் மீது மிகுந்த இரக்கத்தை ஏற்படுத்துகிறது...

“அடப்பாவி உனக்கா இந்தக் கேடு” என்று மைண்ட் வாய்சில் பேசுகிறேன் என்று நினைத்து சத்தமாகவே பேச வைத்துவிட்டன என்னை... மேலும் வேலையை விட்டு நின்னப்புறம் “இன்னிக்கு லீவா” என்று மற்றவர்கள் கேட்கும்போது உள்ள தர்மசங்கடத்தை தாவூதுபோல நானும் அனுபவித்திருக்கிறேன்...

வெற்றிலை போடுவது, மீன் பிடிப்பது, பெரியாஸ்பத்திரி அட்மிஷன் போடுவது, பள்ளியில் சத்துணவு வாங்கிச் சாப்பிடுவது என்று பல விஷயங்கள் மனதை கிளறி விதை முளைக்கச் செய்பவை...

குத்தூஸ்-சின் நரித்தனம், அவர் நடத்தி வைத்த பிரம்மாண்ட கல்யாணம், கணக்குச் சொல்லும் இடம், பத்திரப்பதிவு, கடைசியில் தாவூதிற்கு உதவுவது என்று அவர் தனித்து நிற்கிறார்.

உசேன், அவனது நண்பன் பாண்டி அவர்களது நட்பு அருமை.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்... 400 பக்க நாவலை ஒரு ஏ4ல் எழுதுகிறேன் என்ற குற்றவுணர்வு இருக்கிறது...

“கவுரதையும் ரோஷமும் நாலுநாளைக்கு கூடவருமா? அப்புறம் பசிக்குமே!”

“மனுஷன் தன்னோட சுயத்தை இழக்குறது பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடுறப்பத்தான்”

- இவையிரண்டும் என்னை இன்னமும் ஏதோ செய்து கொண்டே இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...