Skip to main content

அப்பாவான எம்.எல்.ஏ - சிறுகதை



எதிர்க்கட்சித் தலைவர் கணித்தபடியே சட்டமன்றத்துக்கு முன்கூட்டித் தேர்தல் வந்தது.

பரபரத்துப்போனார்கள் உயிரினும் உயிரானவர்கள்...
யாராருக்கு சீட் என்பதில் அடிபுடியாகி ஒருவழியாக 234 தொகுதிக்கும் யாரார் போட்டியிடப்போகிறார்கள் என்று அறிவிப்பும் வந்துவிட்டது.
அதில் திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர் என்று பெஸ்கி ரவி பெயர் இருந்தது.
அறிவிப்பைப் பார்த்ததும் பெஸ்கி ரவியின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன் திரண்டனர்.
“போஸ்டர், டிவி விளம்பரம், அம்பதடில இருந்து நூறடி வரைக்கும் பிளக்ஸ்ன்னு பிச்சு எடுத்துருங்க... காசப்பத்தியெல்லாம் கவலப்படாதீங்க... எம்.எல்.ஏ எலக்சன்ல நம்ம தொகுதியில என்னிய ஒருத்தனும் மறக்கமுடியாதபடிக்கு தீயா வேல பாக்கணும்... சின்னக் கொழந்தைக்குக்கூட என்னிய யார்னு தெரியணும்... சரிதானா” என்று சொல்லிய பெஸ்கி ரவி, ஒரு ஐநூறு ரூபாய் கட்டை பிரித்தார்.
தொண்டர்களுக்கு கொடுக்க வேண்டியது... அடுத்தடுத்து செய்ய வேண்டியது எல்லாம் செய்து முடித்தாகி விட்டது. 
பத்துநாள் எப்படிப்போனதென்றே தெரியவில்லை...
எங்கு பார்த்தாலும் பெஸ்கி ரவி... பெஸ்கி ரவிதான்...
தொண்டர்கள் சொன்னதைச் செய்துவிட்டதாக ஒரு பெருமிதம் பெஸ்கி ரவிக்கு இருந்தது.
“ஏங்க வர்ற வழியில நம்ம குழந்தைய ஸ்கூல்ல இருந்து கூட்டி வந்திருங்க... ஆட்டோக்காரன் இன்னிக்கு வரமாட்டானாம்... இப்பத்தான் போன் பண்ணினான்...”
மனைவியின் இந்தக் கோரிக்கையை முதலில் மறுத்த பெஸ்கி ரவி... ஒரு காரணத்தை முன்னிட்டு பள்ளிக்குச் சென்றார்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை  அழைத்து என்னைத் “தெரிகிறதா?” என்றார்.
அவரை மேலுங்கீழுமாக பார்த்த சிறுவன், “தெரியவில்லை” என்றான்.
சுருக்கென்று இருந்தது.
“பிளக்ஸ், போஸ்டர், டிவி என எதிலும் என்னைப் பார்க்கவில்லையா....?”
“டிவியில நான் சோட்டா பீம் மட்டுந்தான் பாப்பேன்...” என்றான் அவன்.
கோபம் கொப்பளித்தது.
“நான்தான் இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதாவது உனக்குத் தெரியுமா?”
“அப்படீன்னா” குரலில் தெனாவெட்டு
அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து, “டே... இவரைத் தெரியலையா... இவர் தான்டா நம்ம பிரண்ட் கணேசோட அப்பா...” என்றான்.
“ஐயா... பள்ளிக்கொடத்துக்கு வந்தா நீங்க எந்தப் பிள்ளையோட அப்பான்னு சொன்னாத்தான் தெரியும்... நீங்க எவ்வளவு பெரிய ஆள்னு சின்னப் பயலுகளுக்கு எப்படித் தெரியும்...” என்று வாட்ச்மேன் சிரித்துக் கொண்டே சொன்னதைக் கேட்ட எம்.எல்.ஏ அதன்பிறகு அப்பாவாக மாறினார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...