Skip to main content

அப்பாவான எம்.எல்.ஏ - சிறுகதை



எதிர்க்கட்சித் தலைவர் கணித்தபடியே சட்டமன்றத்துக்கு முன்கூட்டித் தேர்தல் வந்தது.

பரபரத்துப்போனார்கள் உயிரினும் உயிரானவர்கள்...
யாராருக்கு சீட் என்பதில் அடிபுடியாகி ஒருவழியாக 234 தொகுதிக்கும் யாரார் போட்டியிடப்போகிறார்கள் என்று அறிவிப்பும் வந்துவிட்டது.
அதில் திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர் என்று பெஸ்கி ரவி பெயர் இருந்தது.
அறிவிப்பைப் பார்த்ததும் பெஸ்கி ரவியின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன் திரண்டனர்.
“போஸ்டர், டிவி விளம்பரம், அம்பதடில இருந்து நூறடி வரைக்கும் பிளக்ஸ்ன்னு பிச்சு எடுத்துருங்க... காசப்பத்தியெல்லாம் கவலப்படாதீங்க... எம்.எல்.ஏ எலக்சன்ல நம்ம தொகுதியில என்னிய ஒருத்தனும் மறக்கமுடியாதபடிக்கு தீயா வேல பாக்கணும்... சின்னக் கொழந்தைக்குக்கூட என்னிய யார்னு தெரியணும்... சரிதானா” என்று சொல்லிய பெஸ்கி ரவி, ஒரு ஐநூறு ரூபாய் கட்டை பிரித்தார்.
தொண்டர்களுக்கு கொடுக்க வேண்டியது... அடுத்தடுத்து செய்ய வேண்டியது எல்லாம் செய்து முடித்தாகி விட்டது. 
பத்துநாள் எப்படிப்போனதென்றே தெரியவில்லை...
எங்கு பார்த்தாலும் பெஸ்கி ரவி... பெஸ்கி ரவிதான்...
தொண்டர்கள் சொன்னதைச் செய்துவிட்டதாக ஒரு பெருமிதம் பெஸ்கி ரவிக்கு இருந்தது.
“ஏங்க வர்ற வழியில நம்ம குழந்தைய ஸ்கூல்ல இருந்து கூட்டி வந்திருங்க... ஆட்டோக்காரன் இன்னிக்கு வரமாட்டானாம்... இப்பத்தான் போன் பண்ணினான்...”
மனைவியின் இந்தக் கோரிக்கையை முதலில் மறுத்த பெஸ்கி ரவி... ஒரு காரணத்தை முன்னிட்டு பள்ளிக்குச் சென்றார்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை  அழைத்து என்னைத் “தெரிகிறதா?” என்றார்.
அவரை மேலுங்கீழுமாக பார்த்த சிறுவன், “தெரியவில்லை” என்றான்.
சுருக்கென்று இருந்தது.
“பிளக்ஸ், போஸ்டர், டிவி என எதிலும் என்னைப் பார்க்கவில்லையா....?”
“டிவியில நான் சோட்டா பீம் மட்டுந்தான் பாப்பேன்...” என்றான் அவன்.
கோபம் கொப்பளித்தது.
“நான்தான் இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதாவது உனக்குத் தெரியுமா?”
“அப்படீன்னா” குரலில் தெனாவெட்டு
அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து, “டே... இவரைத் தெரியலையா... இவர் தான்டா நம்ம பிரண்ட் கணேசோட அப்பா...” என்றான்.
“ஐயா... பள்ளிக்கொடத்துக்கு வந்தா நீங்க எந்தப் பிள்ளையோட அப்பான்னு சொன்னாத்தான் தெரியும்... நீங்க எவ்வளவு பெரிய ஆள்னு சின்னப் பயலுகளுக்கு எப்படித் தெரியும்...” என்று வாட்ச்மேன் சிரித்துக் கொண்டே சொன்னதைக் கேட்ட எம்.எல்.ஏ அதன்பிறகு அப்பாவாக மாறினார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...