Skip to main content

குழந்தைகள் எதைத் தொலைத்தார்கள்...? - தமிழ் வாசல் மாத இதழில் வந்த எனது கட்டுரை


வட்டத்திற்குள் வளைவாக இரண்டு கோடுகள் வரைந்து இது பந்து என்றாள் ஒருத்தி. காதும் மூக்கும் வாயும் கண்களும் வைத்து இது மனித முகம் என்றாள் ஒருத்தி. அந்த வட்டத்தை சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்த கிராமத்துச் சிறுமி அதை நிலா என்றாள்.
உண்மையில் கிராமத்தையும் விவசாயத்தையும் நம்பி வாழ்ந்த விவசாயி தான் கண்டுபிடித்த கருவிகளை மண்ணுக்கோ மனிதருக்கோ பாதகமாக இல்லாதபடிக்குத்தான் உருவாக்கினான். அவன் வெட்டிய கிணற்றிலிருந்து நீரை எடுத்து விவசாயம் செய்தான். வற்றிப்போனால் மாடுகளை வைத்தோ, ஏற்றத்தை வைத்தோ நீர் பாய்ச்சினான்.
கலப்பை, ஏற்றம், பண்ணையரிவாள், சுருமாடு, கிடைமாட்டுச் சாணம், கிடையாட்டுச் சாணம் இவைகள்தான் அவனது உழைப்புக் கருவிகள். இதைத் தாண்டி அவன் யோசித்ததில்லை. அவனது கண்டுபிடிப்புகள் அவ்வளவு மென்மையானவை. 
ஆனால் விவசாயத்தை பெரிதாக்குகிறேன் பேர்வழி என்று வந்த தானியங்கி நாற்றுநடும் இயந்திரமும், மோட்டார் பம்புகளும், உழவு செய்யும் டிராக்டர்களும், கதிரறுவடை செய்யும் இயந்திரங்களும் மண்ணின் மகத்துவத்தைப் புரியாமல் சாலைகளில் காட்டுத்தனமாகத் திரிவதைப் போன்று நமக்கெல்லாம் உணவளிக்கும் நிலங்களின் மீது கட்டற்று ஓடுவதை காண்கிறோம்.
மொத்தத்தில் இப்போது நாம் இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவுகளுக்காக இயந்திரங்களே நம்பியுள்ளோம். 
இது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளவும் வார்த்தைகளை தயாராக வைத்திருக்கிறோம்.
சமீபத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் சமூக ஆர்வலருமான வங்காரி மாத்தாய் என்ற பெண்மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. 
பச்சைப் பட்டை இயக்கம் என்றொரு இயக்கத்தின் மூலம் 50 வருடங்களுக்கு முன்பு நாம் கண்ட பூமியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு புறப்பட்ட அவர் கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த இயக்கத்தைப் பரப்பியுள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி உணவுகளை பெறுவது, விவசாய இயந்திரங்களை குறைந்த அளவுக்கு பயன்படுத்துவது, பசுமையைப் பேணுவது, நீர் நிலைகளை வற்றாமல் பாதுகாப்பது உள்ளிட்ட குறிக்கோள்கள் இந்த பசுமைப் பட்டை இயக்கத்தின் அடிப்படை. 
நோபல் பரிசை கையில் பிடித்துக் கொண்டு அவர் பேசியவார்த்தைகள் மகத்தானவை. நமது இளம் வயது நாட்களை எண்ணிப் பார்க்கச் செய்பவை.
இதோ அந்த வார்த்தைகள்...
"கென்யாவில் எங்கள் வீட்டின் அருகில் அழகிய ஓடை இருந்தது. அந்த ஓடையில் நான் முகம் பார்ப்பேன். நீரை அள்ளிக் குடிப்பேன். தூய்மையும் அழகும் ஒருங்கே கொண்ட அந்த ஓடைதான் எங்கள் கிராமத்தின் ஈரம். ஆனால் இப்போதோ எங்கள் நாட்டுப் பெண்கள் பலமைல் தூரம் நடந்து சென்று தூய்மையற்ற குடிநீரை கொண்டு வந்து குடிக்கிறார்கள். 
எங்கள் வீட்டின் அருகே தவளைகள் குஞ்சு பொறிக்கும், அந்த முட்டைகளை எடுக்கும் ஆவலில் நான் பலமுட்டைகளை உடைத்திருக்கிறேன். அதற்காக வருந்தியிருக்கிறேன். கால்நடைகள் மட்டுமின்றி, சின்னஞ்சிறு உயிர்களுக்கும் கிராம மக்கள் அடைக்கலமாய் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது அந்த உயிரினங்கள் பல கிராமங்களில் காணப்படுவதில்லை. பறவைகளோடும், விலங்குகளோடும், சின்னஞ்சிறு உயிர்களோடும் நான் விளையாடிய அந்த நிகழ்வுகள் என்ன என்று கூட இப்போதுள்ள குழந்தைகளுக்கு தெரியாமல் வளர்க்கப்பட்டு வருகிறார்கள்.
நமது குழந்தைகளுக்கு இயற்கையோடு வாழ பழகிக் கொடுப்போம். அவர்கள் தொலைத்த இன்பங்களை கொண்டு வந்து சேர்ப்போம்" 
ஆக நாம் கடந்த காலங்களில் பெற்ற இயற்கைச் சூழ்நிலையை நம் தலைமுறைகளுக்கும் உருவாக்கித் தர வேண்டியது நம் தலையாய கடமை.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...