Skip to main content

Posts

Showing posts from 2016
இடம் : பெங்களூரு பேருந்து நிலையம் அருகே... பேருந்துகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன... புகையின் நெடி உடலெங்-கும் பரவுகிறது... பேருந்தில் பயணித்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள்...  அந்த வெப்பத் தகிப்பிலும் இருவர் பேசிக் கொள்கிறார்கள்... இருவரும் தமிழ்நாட்டுக்காரர்கள் என்று அவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது...  பச்சை சட்டை போட்டவர் பார்ப்பதற்கு கொஞ்சம் அப்பாவியாக இருந்தார். தீ எரியும் வெப்பத்திலிருந்து சற்று விலகி நின்ற அவர், சற்றுநேரம் பையை கீழே வைத்து விட்டு “என்னய்யா கொடும... 42 பஸ்களை எரிச்சிட்டானுங்க... தண்ணி மாட்டோம்ன்றதுக்கு இப்டியெல்லாம் கலவரம் பண்ணணுமா?” என்று கத்தினார்...  அவர் அப்படிக் கத்தியும் “என்னங்க... பஸ்ஸை எரிச்சதச் சொல்றீங்களா?” என்று கோடுபோட்ட சட்டைக்காரர் கேட்டுவிட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஒருவாறாக கிரகித்துக் கொண்டார். பின்பு அவரும் பையை கீழே வைத்துவிட்டுத் தொடர்ந்தார்... “இப்டியெல்லாம் கலவரம் பண்ணிப்பண்ணிதானே பேசித் தீர்க்க வேண்டிய அவ்வளவு விஷயத்திலேயும் நாட்டை அழிச்சிக்கிட்டிருக்கோம்...” என்று இவரும் கத்தியபடியே ...

இடம்: மதுரை அரசு மருத்துவமனை அருகில் உள்ள டீக்கடை

"இப்டியொரு அக்கிரமமெல்லாம் நம்மநாட்லதான்யா நடக்குது" என்று விரக்தியாக சொல்லியபடியே வந்து குந்தினார் மாரிச்சாமி. ஏற்கெனவே அவருக்கு முன்பாக வந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளையன், "என்னய்யா அக்குருமத்தக் கண்டுட்ட?" என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டார். "ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொல்றேம்ப்பா" என்று ஆரம்பித்த அவர் "சூடா ஒரு டீ போடுப்பா" என்று கேட்டார். "நீங்களே சூடாத்தான வந்திருக்கீங்க... மொதல்ல நடந்ததச் சொல்லுங்க" என்றதும்... படபடவென பொரிந்தார் மாரிச்சாமி... "ஒடிசா மாநிலத்துல நடந்த சம்பவத்தைப் பத்திச் சொன்றேன்ப்பா... அந்த மாநிலத்துல இருக்கிற கலஹண்டி பகுதியைச் சேர்ந்தவரு தனா மஜி. இவரு சம்சாரம் அமன்கடிக்கு உடம்பு சவுரியமில்ல. படக்-குன்னு அங்கனக்குள்ள இருக்க ஒரு அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போனாரு. ஆனா சிகிச்சை பலனனிக்காம அந்த அம்மா செத்துப்போச்சு." "அதுக்கு ஏன்யா நீ இந்தக்குதி குதிக்கிற... பொறப்பு எறப்பு சகசம்" என்று பேச்சை முடிக்கப்பார்த்தார் வெள்ளையன். "சொல்றத முழுசாக்கே...
முன்னப்பின்ன செத்திருக்கீங்களா? கோவிந்தனுக்குத்  தூக்கமே வரவில்லை. நேத்து நேரங்கெட்ட நேரத்துல சாப்பிட்ட எலும்புக்கறி கொழம்பா, சுட்ட ஈரலா என்று தெரியவில்லை. பொரண்டு படுத்தான். வலது பக்கமா பொரளும்போது முத்துப்பாண்டியும், இடதுபக்கமா புரளும் போது ராமசாமியும் படுத்துக்கிடந்தார்கள். “எந்திரிங்கடா... எப்பப்பாத்தாலும் தூங்கிக்கிட்டு. என்னிக்காச்சும் நம்மளுக்கு வேலை இல்லயேன்னு கவலப்பட்டிருக்கிங்களாடா?” என்று ஏக வசனம் பேசினான் கோவிந்தன். “திடீர்னு என்னய்யா ஆச்சு இவனுக்கு” என்று புரியாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டாய்ங்க முத்துப்பாண்டியும் ராமசாமியும். கோவிந்தன் ரெண்டு பேத்தையும் ஒரு மொறைமொறைத்துவிட்டு... “நம்ம பெரிய பெரிய ஆளுககிட்ட  கூலிக்கு வேல பார்த்து நம்ம ரத்தம் சுண்டுனதுதான் மிச்சம்... நம்மளே தனியா ஒரு தொழில் தொடங்குனா என்ன?” னு கேட்டான். “சுயதொழிலா...?” னு ஒரு எக்காளச்சிரிப்பு சிரிச்ச ராமசாமி. முத்துப்பாண்டிக்கும் சிரிப்பு வந்தது. ஆனால் கோவிந்தன் எதாச்சும் சொல்லுவான்னு பேசமா இருந்துக்கிட்டான். “ஏன் செய்ய முடியாதா? முடியும்னு நெனைச்சா முடியும். முடியாதுன்னு நெனைச்...
பச்சை முண்டாசு “வணக்கம்ணே” என்-று சொல்லிவிட்டு அரசமர நிழலில் பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார் பாண்டி. பாண்டிக்கு விவசாயத்தைத் தவிர ஒண்ணுந்த தெரியாது. செடி கொடிககூடத்தான் அவர் பேச்சு பொழப்பு எல்லாம். சில நேரம் வந்து அரசமரத்து நிழல்ல குந்துவார். அப்போதைக்கு அங்கு யாரு இருக்காங்களோ அவுங்ககிட்ட அரசியல் நிலவரம் பற்றி கேட்டுக்குவார். அவருக்கு ரெம்பவும் பிடிச்சவரும், அரசியல் நிகழ்வுகளை அள்ளிக் குடிச்சவரும் ஆன கோமாளி (பேரே அதுது£ன்)தான். அவருக்குத்தான் வணக்கம் சொல்லி விட்டு குந்தினார். “என்னண்ணே வணக்கம் பெருசா இருக்கு” என்று கேட்டு விட்டு மீசையைத் தடவி ஒரு சிரிப்பு சிரித்தார். ஒரு நாளிதழ் பக்கத்தில் கிடந்தது. அவருக்குப் படிக்கத் தெரியாது. ஆனாலும் படம் பார்த்து, அதில் சுவராஷ்யமா எதாச்சும் இருந்தா படிக்கச் சொல்லி கேட்டுக்குவார். “இந்தப் பச்சத்துண்ட தலைல முண்டாசு கட்னவரு  என்னண்ணே சொல்றாரு...?” என்றார். “விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளேன்-” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் தி...
மேய்ப்பர் யார்? ---------------------------------- “ஆடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம்“ இது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த அம்சம். இதுசம்பந்தமாக ஆடு மேய்க்கும் ஒரு பையனிடம் பகல் 10 மணிக்கு ஆபீஸ் ஆரம்பிக்கும் நேரத்தில் கேட்டபோது “உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தா ஆடுக காணாமப் போயிரும்... அடுத்தவன் வுட்டு நெலத்துல வாய வச்சுச்சுன்னா நாந்தான் தெண்டங்கட்டனும்... சாயந்தரமா வாங்க”ன்னுட்டான். நம்மளவிட பிஸியான ஆளா இருப்பான்போலனு பொழுதுசாய அவன மீட் பண்ணலாம்னு பாத்தா, அப்பவும் அவன் பயங்கர பிஸி. பட்டியில் சேர்ந்த ஆடுகளை கண்களாலேயே அளவெடுத்தான்... அவனுக்கு எண்ணத் தெரியாது... ஆனால் எல்லா ஆடுகளின் அடையாளமும் தெரியும்... ஒண்ணொண்ணுக்கும் அடையாளம் வச்சிருப்பான். ‘வாய்ல மட்டும் வெள்ளை விழுந்த ஆடு, கொம்பு நெளிஞ்ச ஆடு, காது சுருங்குன ஆடு’ இப்டின்னு... அதுபடி பாக்கும் போது காது சுருங்குன ஆட்டக் காணாம்... அது எங்கனுன்னு தேடிப்போனான். நான் பின்னாடியே போனேன்... அந்த ஆடு அஜய்குமாரோட (என்னடா கிராமத்துல அஜய்குமாரா னு கேக்காதீங்க... இங்க அஜித் குமார், நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்றெ...
குரலை நெரித்த ஹெலிகாப்டர் சத்தம் எஸ்.சஞ்சய் “ எட்டுமணிக்கு வண்டி வந்துரும்... ரெடியா இருக்கனும். கைப்புள்ள வச்சிருக்கவங்க வீட்லயே இருந்துக்கங்க... அம்மா பேசிக்கிட்டிருக்கும்போது அழுதுச்சுன்னா ‘காவிரிய வச்சிக்கோ அம்மாவ குடு’ன்னு பிளக்ஸ் அடிச்சு ஊரு முழுக்க ஒட்டினது... பரப்பன அக்ஹரஹாரம் என்று பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து அம்மா மைண்டும் அங்க போயிரும். பேச்சும் மாறிடும்... அப்புறம் எங்க பொழப்பு நாறிடும்... அதனால சொல்றபடி கேளுங்க” என்று ஆரம்பித்தார் ஒன்றியத் தலைவர். அம்புட்டுபேரும் கோயில்மாடு கணக்கா தலைய ஆட்டுனாய்ங்க... “ ஆத்துமணல் லோடு ஏத்துற அரைப்பாடி வண்டி வரும்... அம்புட்டுபேரும் ஏறிக்கங்க... ஏறும்போது எறநூறு ரூவா , ஒரு பிரியாணிப் பொட்டலம் தருவோம்... வாங்கிக்கிட்டு ஜாலியா போங்க... ஒரு மைதானத்துல எறக்கிவிடுவாங்க... சுத்தி மரங்க இருக்கனால வெயிலு தெரியாது... கொஞ்சநேரத்துல அம்மா வந்துருவாங்க... ஒருமணிநேரம் பேசுவாங்க.. அம்மாவக் கவனிக்கிறீங்களோ இல்லியோ... பக்கத்துல கோட்டு சூட்டு போட்ட ஒருத்தர கண்டிப்பா கவனிச்சே ஆகனும்... அவரு எப்ப கைய மேல தூக்கி கைதட்டுறாரோ அந்த நேரம் நல்லா கைதட்...